Advertisment

வீடியோ: குழியில் விழுந்த குட்டியை காப்பாற்றியவர்களுக்கு தும்பிக்கையை அசைத்து நன்றி சொன்ன தாய் யானை

தன் குட்டி யானையை மீட்ட வனத்துறையினருக்கு, தாய் யானை தும்பிக்கையை தூக்கி நன்றியை வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீடியோ: குழியில் விழுந்த குட்டியை காப்பாற்றியவர்களுக்கு தும்பிக்கையை அசைத்து நன்றி சொன்ன தாய் யானை

கேரளாவில் பெரும் குழியில் சிக்கிய தன் குட்டி யானையை மீட்ட வனத்துறையினருக்கு, தாய் யானை தும்பிக்கையை தூக்கி நன்றியை வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கேரளா மாநிலத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள தட்டேகாட்டில், குட்டி யானை ஒன்று அங்குள்ள உருளாந்தண்ணி ஆற்றை கடக்கும்போது, பெரிய குழியில் விழுந்துவிட்டது. அதைக்கண்டு அங்கிருந்த யானை கூட்டம், குழியில் விழுந்த குட்டி யானையை மீட்க முயற்சித்தன.

ஆனால், அவற்றால் மீட்க முடியாமல் போனது. நல்ல வேளை தகவலறிந்து அங்கு வனத்துறையினர் வந்து குட்டி யானையை மீட்டனர். பின், அந்த குட்டி யானை தன் யானை கூட்டத்துடன் சென்று சேர்ந்தது.

இதன்பின்பு நடந்ததுதான், அங்கிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது. அந்த குட்டி யானையின் தாய் யானை, அங்கிருந்தவர்களை நோக்கி, தன் தும்பிக்கையை அசைத்தது. இது, தன் குட்டியை காப்பாற்றிய வனத்துறையினருக்கும், மக்களுக்கும் நன்றி செலுத்துவதாக அமைந்தது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் இந்த வீடியோவை பாருங்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment