Advertisment

திக் திக் வீடியோ; வால்பாறையில் திடீரென பேருந்தை நோக்கி நடந்து வந்த யானை: பயணிகள் பீதி

வால்பாறை நெடுஞ்சாலையில் பேருந்தை வழிமறித்த காட்டு யானை தொடர்ந்து பயணிகள் இருந்த பேருந்தை நோக்கி நடந்து வந்ததால் அச்சம்

author-image
WebDesk
New Update
Elep valpa.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை மாவட்டம் வால்பாறை பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் ஆழியார் பகுதியில் சாலையில் உலா வந்த காட்டு யானை. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறையை நோக்கி வந்த TN:38.N:3442 பேருந்து இரவு பொள்ளாச்சியில் இருந்து வில்லோனியை நோக்கி வந்து கொண்டிருந்தது. 

Advertisment

ஆழியார் சோதனைச் சாவடி மற்றும் கவியருவி இடைப்பட்ட பகுதியில் வந்தபோது எதிரே காட்டு யானை ஹாய்யாக சாலையில் நடந்து வந்ததை பார்த்த ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியுள்ளார். 

அப்போது திடீரென பேருந்தை நோக்கி வந்த யானை பேருந்தை சேதப்படுத்தாமல் சாலை ஓரமாக சென்றதால் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் பயணிகள் அச்சத்திலும் பீதியில் பயணித்தனர்.

எனவே வனத்துறையினர் வால்பாறையை நோக்கி வரும் வாகனங்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் எனவும் எச்சரிக்கை செய்தனர்.

மேலும் வனத்துறையினர் இரவு நேரங்களில் சாலையில் சுற்றித் திரியும் ஒற்றைக் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தி: பி.ரஹ்மான்

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment