வாட்ஸ் அப் சேட்டில், குரூப் காலிங் வசதியை அறிமுகப்படுத்திய அந்நிறுவனம் தற்போது புதிய அப்டேட் ஒன்றை செயல்படுத்தவுள்ளது.
உலகம் முழுவதும் பல கோடி வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படும் முக்கிய சமூக வலைதளங்களுள் ஒன்றான வாட்ஸ் அப் செயலி நாளுக்கு நாள் புதிய புதிய அப்டேட்டுகளால் அனைவரையும் கவர்ந்து வருகிறது. ஸ்மார்ஃபோன்களை வைத்திருப்பவர்களில் வாட்ஸ் அப் செயலி இல்லாத ஒருவரை கூட இன்றைய தொழில் நுட்ப உலகில் பார்ப்பது கடினமாக மாறி வருகிறது. அறிவியல் முன்னேற்றங்கள், புதிய கண்டுப்பிடிப்புகள் மனிதர்களை தொழில் நுட்பத்திற்கு அடிமையாக மாற்றி வருகிறது.
இதில், முக்கிய பங்கு ஃபேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் போன்றவற்றையே சாரும். இதில், வாட்ஸ் அப் செயலி உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் ஒன்று. நொடி பொழுதில் நமது நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு அனுப்ப வேண்டிய தகவலை மெசேஜ், ஃபோட்டோ, வீடியோ, வாய்ஸ் கால்ஸ், வீடியோ கால் என எந்த வகையில் வேண்டுமானாலும் தெரிய படுத்தலாம். அதனுடன், குரூப் சேட்டிங், எமோஜி வசதி, வாய்ஸ் சேட்டிங் என பல வசதிகள் யூசர்களை கவர, அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வாட்ஸ் அப் நிறுவனம், சமீபத்தில் குரூப் காலிங் வசதியை அறிமுகப்படுத்தியது. இந்த குரூப்பில் 2 நபர்களுடன் மட்டுமே வாய்ஸ் காலிங்கில் பேசக்கூடிய வசதி இருந்தது. தற்போது, இந்த வெர்ஷன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் காலிங் மொத்தம் 4 நபர்கள் கலந்துரையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்ராய்ட் பீட்டா வெர்ஷன் 2.18.39. ல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் இந்த அப்டேட் வெர்ஷனை ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் செய்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்திய மெசேஜ் டெலிட்டிங் வசதி, யூசர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு மெசேஜை அனுப்பிய 7 நிமிடங்களுக்குள் அதனை டெலிட் செய்து விடலாம். தவறாக அனுப்பப்படும் மெசேஜ்களை அழிக்க இந்த வசதி வெகுமாக பயன்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.