Advertisment

கடலூரில் வாலிபர் எரித்துக் கொலை! இறப்பதற்கு முன் வாக்குமூலம்!

90 சதவிகிதம் எரிந்த நிலையில் இருந்த ஆனந்தன் வாக்குமூலம் அளித்திருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கடலூரில் வாலிபர் எரித்துக் கொலை! இறப்பதற்கு முன் வாக்குமூலம்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த சாத்தாவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் மகன் ஆனந்தன்(22).  அதே ஊரைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இரு தரப்பினர் இடையே, வழக்கு தொடர்பாக முன் விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் சாத்தாவட்டம் பஸ் நிலையத்தில் நின்றிருந்த ஆனந்தனை, சிலம்பரசன் மற்றும் அவரது தரப்பினர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சாத்தாவட்டம் கிராமத்திற்குச் சென்றபோது, அங்கு ஆனந்தன் உடலில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

போலீசாரிடம், தன்னை சிலம்பரசன் மற்றும் சிலர் தாக்கி, மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்ததாக 90 சதவிகிதம் எரிந்த நிலையில் இருந்த ஆனந்தன் வாக்குமூலம் அளித்திருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதனிடையே ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில், சாத்தாவட்டம் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன், பூவரசன், பாரதி, தமிழ்மணி, மணிமாறன், சிற்றரசன், சுப்ரமணியன் ஆகிய 7 பேர் மீது, ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஆனந்தன் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

Cuddalore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment