Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு இறுதியானது என கூறி வந்த நிலையில் மத்தியஅரசு தனது நிலைப்பாட்டை,மாற்றி நாடாளுமன்ற விவாதத்திற்கு உட்பட்டது என கூறியுள்ளது

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today

Tamil Nadu News Today

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் கால தாமதம் செய்து வரும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisment

காவிரி நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பபை எதிர்த்து தமிழகம், புதுவை கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் தமிழகம், புதுவை கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தங்களது இறுதி வாதத்தை முன் வாய்த்த நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசு தனது வாதத்தை முன்வைத்தது. அப்போது, காவிரி தீர்பாய உத்தரவை திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உள்ளது என மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு இறுதியானது என கூறி வந்த நிலையில் மத்தியஅரசு தனது நிலைப்பாட்டை,மாற்றி நாடாளுமன்ற விவாதத்திற்கு உட்பட்டது என கூறியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவு என்பது நாடாளுமன்றத்தில் விவாதித்து செயல்படுத்தப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட மத்திய அரசு, நதிநீர் பங்கீடு விவகாரங்களில் அனைத்து தரப்பிற்கும் சாதகமாகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பேதங்கள் கிடையாது எனவும் குறிப்பிட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கான மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து, கடந்த 2013-ம் ஆண்டில் அரசாணை வெளியிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கால தாமதம் செய்வது தவறான அணுகுமுறை என்றும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, காவிரிவிவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தான் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தோம். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எந்த தீர்ப்பினை கொடுத்தாலும் முழுமையாக செயல்படுத்த தயாராக உள்ளோம் எனவும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

Supreme Court Cauvery Issue Cauvery Management Board
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment