ஓக்கி புயலால் சிக்கி மாயமான 462 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை என, வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓக்கி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து, வேளாண்மை துறை முதன்மை செயலாளரும், கண்காணிப்பு அலுவலருமான ககன் தீப்சிங் பேடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
இதன்பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய ககன்தீப் சிங் பேடி, “கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 13 சிறிய படகுகளில் சென்ற 35 மீனவர்கள் மற்றும் 43 பெரிய படகுகளில் சென்ற 462 மீனவர்களின் நிலைமையும் என்னவென்று தெரியவில்லை”, என தெரிவித்தார்.
மேலும், மீட்பு பணிகள் நிறுத்தப்படாது எனவும் ககன்தீப் சிங் பேடி கூறினார்.