இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் ஆளுனர், முதல்வர், துணை முதல்வர் வரவேற்றனர்.
இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று (டிசம்பர் 10) காலை சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெங்கையா நாயுடுவை வரவேற்றனர்.
வானவில் பண்பாட்டு மையத்தின் 24-ம் ஆண்டு விழாவை ‘பாரதி பெருவிழா, தேசபக்தி பெருவிழாவாக’ சென்னையில் கொண்டாடுகிறார்கள். இதில் வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். சென்னையில் வேறு சில நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார்.