Advertisment

வேலூரில் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி, எஸ்.ஐ கைது!

ஒரு லாரிக்கு ₹.20 ஆயிரம் என 6 லாரிக்கு ₹.1,20,000 மற்றும் பொங்கல் போனஸாக ₹.25,000 என மொத்தம் ₹.1,45,000 வாங்கியுள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வேலூரில் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி, எஸ்.ஐ கைது!

வேலூர் மாவட்டம் சாணாங்குப்பம் லட்சுமி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (41). செங்கல் சூளை நடத்தி வருகிறார். அவர் 2 டிப்பர் லாரி, ஒரு டிராக்டர் வைத்துள்ளார். மணல் குவாரியில் மணல் எடுத்துச் செல்ல பர்மிட் வாங்கி வைத்திருந்தார். மணல் குவாரி மூடப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் மணலை விற்பனை செய்யவேண்டும் எனவும் ஒரு லாரிக்கு ₹.20 ஆயிரம் வீதம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என டிஎஸ்பி தன்ராஜ் கூறியுள்ளார்.  மணல் லாரி ஓட்டாவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என மிரட்டியுள்ளார். இதையடுத்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் மணல் எடுக்க முடிவானது. இதற்காக ஆம்பூர் நகர எஸ்.ஐ.லூர்து ஜெயராஜ் புரோக்கராக செயல்பட்டு பணம் பெற்றுள்ளார். ஒரு லாரிக்கு ₹.20 ஆயிரம் என 6 லாரிக்கு ₹.1,20,000 மற்றும் பொங்கல் போனஸாக ₹.25,000 என மொத்தம் ₹.1,45,000 வாங்கியுள்ளார்.

இதில் ₹.1,20,000 லட்சம் பணத்தை வாங்கிய தன்ராஜ் (54), ₹.25,000 பணத்தை எடுத்துக்கொண்ட எஸ்ஐ.லூர்து ஜெயராஜ் (51) ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment