Advertisment

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குதிரைகளுக்கு தீவனம் வழங்கிய உதயநிதி

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் 200 குதிரைகளுக்கு, 136 கிலோ தீவனத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

author-image
Vasuki Jayasree
New Update
sada

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் 200 குதிரைகளுக்கு, 136 கிலோ தீவனத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Advertisment

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி  சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குதிரைகளுக்கு தீவனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் 136 கிலோ தீவனத்தை வழங்கினார். மருத்துவ உதவிகளுக்கான பெட்டி ஒன்றையும் உதயநிதி வழங்கினார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் “ இன்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில், புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குதிரைகளுக்கு 136 கிலோ தீவனம் வழங்கப்பட்டது. மேலும் குதிரைகளை பராமரிக்கும், உரிமையாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளோம் “ என்று அவர் கூறினார்.

மிக்ஜாம் புயல் வெள்ளதால், சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 800 மருத்துவ முகாம்கள் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment