Advertisment

இந்திய தேர்தல் ஆணையத்தில் நாளை மீண்டும் குஸ்தி : 10 நாள் இடைவெளிக்கு பிறகு இரட்டை இலைக்கான வாதம்

இந்திய தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்திற்கான குஸ்தி, 10 நாள் இடைவெளிக்கு பிறகு நாளை மீண்டும் நடக்கிறது. டிடிவி தரப்பு வாதம் நடைபெறும்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
election commission of india, two leaves symbol, tamilnadu government, aiadmk, ttv dhinakaran, cm edappadi palaniswami, deputy cm o.panneerselvam, v.k.sasikala

இந்திய தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்திற்கான குஸ்தி, 10 நாள் இடைவெளிக்கு பிறகு நாளை மீண்டும் நடக்கிறது. டிடிவி தரப்பு வாதம் நடைபெறும்.

Advertisment

இரட்டை இலை சின்னத்தை கடந்த மார்ச் மாதம், இந்திய தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்தச் சின்னத்திற்கு சசிகலா-டிடிவி தினகரன் ஒரு தரப்பாகவும், மதுசூதனன் - ஓபிஎஸ் இன்னொரு தரப்பாகவும் இரட்டை உரிமை கோரினார்கள். இரு தரப்பும் போட்டி போட்டு, தேர்தல் ஆணையத்தில் தங்கள் தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

இரட்டை இலைக்கு உரிமை கோரி சசிகலா தரப்பு 7 லட்சம் அபிடவிட்களையும், ஓபிஎஸ் தரப்பு 2 லட்சம் அபிடவிட்களையும் தாக்கல் செய்து முடித்த நிலையில்தான் அடுத்த திருப்பம்! சசிகலா அணியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்தார். இதைத் தொடர்ந்து, சசிகலா -ஓபிஎஸ் இடையே இருந்த மோதல் சசிகலா-இபிஎஸ் இடையிலான மோதலாக உருவெடுத்திருக்கிறது.

ஆனாலும் இந்திய தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் வழக்கைப் பொறுத்தவரை சசிகலா-டிடிவி ஒரு தரப்பாகவும், மதுசூதனன் -ஓபிஎஸ் இன்னொரு தரப்பாகவும் இருக்கிறார்கள். இரு தரப்பும் ஆவணங்களை கடந்த 29-ம் தேதியுடன் தாக்கல் செய்து முடித்த நிலையில், இறுதி விசாரணை அக்டோபர் 6-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடப்பதாக இருந்தது. ஆனால் அந்த விசாரணையை தள்ளி வைக்க டிடிவி தரப்பு கோரிக்கை வைத்தது.

ஆனால் இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் வாதங்களை முன்வைக்க அன்று தேர்தல் ஆணையம் அனுமதித்தது. அதன்படி மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

சி.எஸ்.வைத்தியநாதன் வாதிடுகையில், ‘ஜெயலலிதா இறந்த தினத்தில் டிடிவி தினகரன் கட்சியில் உறுப்பினராகவே இல்லை. முக்கிய நிர்வாகிகளான இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்துவிட்டதால் அவர்களுக்கு சின்னத்தை வழங்க வேண்டும். சசிகலா குற்றவாளியாகவும், டிடிவி வழக்குகளை எதிர்கொள்கிறவராகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு கட்சியில் மெஜாரிட்டி இல்லை’ என வாதிட்டார்.

தொடர்ந்து முகுல் ரோஹத்கி வாதிடுகையில், ‘அதிமுகவின் 44 எம்.பி.க்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் தவிர எஞ்சிய எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் 95 முதல் 98 சதவிகிதம் வரையிலான நிர்வாகிகள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இந்த வழக்கை தாமதப்படுத்தவே டிடிவி தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கிறார்கள்’ என குற்றம்சாட்டினார்.

அன்று டிடிவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா, ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் தங்கள் தரப்பு வாதத்தை வைக்க அவகாசம் கேட்டதை தொடர்ந்து, விசாரணையை அக்டோபர் 13-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். பிறகு தேர்தல் ஆணையமே நிர்வாக வசதிகள் காரணமாக அக்டோபர் 16-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு விசாரணை நடைபெறும் என அறிவித்தது. அதன்படி நாளை நடைபெறும் விசாரணையில், டிடிவி தரப்பு வழக்கறிஞர்கள் தங்களின் வாதங்களை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விசாரணையையொட்டி முன் ஏற்பாடுகளை கவனிக்க இபிஎஸ்-ஓபிஎஸ் அணி சார்பில் தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று (15-ம் தேதி) டெல்லிக்கு கிளம்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், ‘இரட்டை இலை சின்னம் நிச்சயம் எங்களுக்கு கிடைக்கும். எதிர்தரப்பில் வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். அதற்காகவே அவர்கள் அவகாசம் கேட்கிறார்கள்’ என்றார்.

டிடிவி தரப்பும் இன்று டெல்லிக்கு பயணமாகிறது. அவர்கள் தரப்பில் முன்னணி வழக்கறிஞர்கள் ஆஜராவார்கள். இந்திஒய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஏ.கே.ஜோதி உள்பட 3 ஆணையர்களும் இந்த வழக்கை விசாரிக்கிறார்கள். தீபாவளி கொண்டாட்டங்களுக்கு இடையே தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணையும் தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

 

V K Sasikala Ttv Dhinakaran Two Leaves Symbol
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment