Advertisment

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் : இன்று டிடிவி தரப்பின் ஒரு கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றது

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் கூடியதும் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த ஒரு கோரிக்கையை நீதிபதி ஏற்றார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
ttv.dhinakaran faction 18 mla's disqualification, ttv.dhinakaran faction mla's, chennai high court accepts ttv faction demand

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் கூடியதும் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த ஒரு கோரிக்கையை நீதிபதி ஏற்றார்.

Advertisment

டிடிவி.தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் கடந்த 18-ம் தேதி தகுதி நீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து சபாநாயகர் உத்தரவை ரத்து செய்யக் கோரியும் அந்த உத்தரவுக்கு தடை கேட்டும் டிடிவி அணி எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

டிடிவி அணி எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகா மாநிலத்தில் முகாமிட்டிருக்கும் நிலையில் முதல் கட்டமாக 8 எம்.எல்.ஏ.க்களும், அதன்பிறகு 10 எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாக அந்த மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன்பு இன்று 48-வது வழக்காக பட்டியல் இடப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கு பட்டியல் இன்று டிடிவி.தினகரன் தரப்பு கைகளுக்கு வந்து சேர்ந்தபோது அவர்களுக்கு ஷாக்! காரணம், டிடிவி அணி தரப்பில் முதலில் தாக்கல் செய்யப்பட்ட 8 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு மட்டுமே உரிய வழக்கு எண் பதிவாகி விசாரணைக்கு பட்டியல் இடப்பட்டிருந்தது. ஏனைய 10 எம்.எல்.ஏ.க்களின் மனு, முறையாக பதிவு செய்யப்பட்டு எண் வழங்கப்படவில்லை. எனவே 8 எம்.எல்.ஏ.க்களின் மனு மட்டுமே இன்று விசாரிக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்தது.

ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இன்று கூடியதும், நீதிபதி துரைசாமியின் அமர்வு முன்பு ஆஜரான டிடிவி தரப்பு வழக்கறிஞர் பி.ஆர்.ராமன், ‘10 எம்.எல்.ஏ.க்கள் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், அதையும் 8 எம்.எல்.ஏ.க்களின் வழக்குடன் இணைத்து விசாரிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார். இதை நீதிபதி துரைசாமி ஏற்றுக்கொண்டார்.

அதன்படி இதர 10 எம்.எல்.ஏ.க்களின் மனுவுக்கும் வழக்கு எண் பதிவு செய்யப்பட்டு இணைத்து விசாரிக்கப்படுகிறது. இன்று நண்பகல் 12 மணிக்கு இந்த வழக்கு விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிடிவி தரப்பு சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். மூத்த வழக்கறிஞர்கள் பி.ஆர்.ராமன், சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே ஆகியோர் ஆஜராகி வாதிடுவார்கள் என தெரிகிறது.

தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆகியோர் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு இதே நீதிபதி முன்பு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்குகள் தேசிய அளவில் அதிக கவனம் பெற்றிருப்பதால், தமிழ் ஊடகங்கள் மட்டுமல்ல வட இந்திய ஊடகங்களும் உயர்நீதிமன்றத்தை முற்றுகை இட்டிருக்கின்றன. உயர்நீதிமன்ற உத்தரவைப் பொறுத்தே, இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Chennai High Court Ttv Dhinakaran Tn Assembly Speaker Dhanapal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment