Advertisment

ஒரே நாளில் 32 தமிழக மீனவர்கள் கைது

32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை ஒரே நாளில் கைது செய்துள்ளது.

author-image
Vasuki Jayasree
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

32  தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை ஒரே நாளில் கைது செய்துள்ளது.

Advertisment

ராமேஷ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வங்கக் கடலில் நேற்று காலை மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் நேற்று நள்ளிரவு  நெடுந்தீவு  அருகே  இந்திய கடல்  பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை மிரட்டி கைது செய்தனர்.  

இதுபோன்று மன்னார் கடற்பரப்பில் இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களையும் அத்துமீறி இலங்கை கடற்பரையினர் கைது செய்தனர். இதில் ஒரு படகு பழுதாகி இருந்த நிலையிலும்  அத்துடன் சேர்த்து 2 படகுகளை பறிமுதல் செய்து, அதிலிருந்த 7 மீனவர்களையும் கைது செய்தனர். இந்த இரண்டு சம்பவங்களில் மொத்தம் 32 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment