Advertisment

ஜெ. மரணம் குறித்து அமைச்சர்கள் பேச தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி அமைச்சர்கள் ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்வதை தடை விதிக்கக் கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
theni constituency,O.P.Raveendranath Kumar, ADMK, Milani, Madras High Court, தேனி மக்களவைத் தொகுதி, ஓ.பி.ரவிந்திரநாத் குமார், அதிமுக, சென்னை உயர் நீதிமன்றம், DMK, Congress,

theni constituency,O.P.Raveendranath Kumar, ADMK, Milani, Madras High Court, தேனி மக்களவைத் தொகுதி, ஓ.பி.ரவிந்திரநாத் குமார், அதிமுக, சென்னை உயர் நீதிமன்றம், DMK, Congress,

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர்கள் பேசுவதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Advertisment

திருவாரூர் மாவட்டம் குடவாசலைச் சேர்ந்தவர் முருகானந்தம். அ.தி.மு.க. பிரமுகர். இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ’உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு விதமான கருத்துகள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. அவரது மரணத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து எந்த தெளிவான விடையும் கிடைக்கவில்லை.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கோரிக்கை விடுத்தனர். ஜெயலலிதா மரணம் அடைந்ததும் இயற்கை மரணம் என்று மக்களை நம்பவைத்தனர். இந்தநிலையில் முதல் அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜெயலலிதாவின் சமாதியில் மவுனம் கடைபிடித்தார். இதன்பின்பு அவர், ஜெயலலிதா மரணம் இயற்கையானது அல்ல என்றும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்றும் கோரினார். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் பின்பு, பன்னீர்செல்வமும் எதிர் அணியினரும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டினர். இந்தநிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பின்பு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன்பின்பும், அமைச்சர்களும், பிற அரசியல் கட்சியினரும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர்.

இதன்மூலம் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையாக நடக்கவில்லை. அவரது மரணத்துக்கு பின்னால் மிகப்பெரிய சக்தி இருந்துள்ளது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில் அமைச்சர்கள் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பேசி இருக்கக்கூடாது. இதுபோன்று பேசுவதால் நீதி விசாரணை நேரடியாகவோ மறைமுகமாவோ பாதிக்கும். எனவே, ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பொது மேடைகளில் பேசுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.'

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ’முன்னாள் முதல்வர் மரணம் தொடர்பாக அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றம் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. அந்த குழு தனது பணியை தெடங்கிவிட்டது என அது தொடர்பான அரசாணையை தாக்கல் செய்தார்.

இதனை அடுத்து நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தவிட்டனர். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுவை தள்ளுபடி செய்துள்ள நிலையில், ’அமைச்சர்கள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பேச தடை விதிக்க வேண்டும்’ என கோரினார்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பேச்சுரிமை என்பது அனைவரின் அடிப்படை உரிமை. எனவே இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர். நீதிபதிகள் மனுதரார் கோரிக்கை நிராகரித்து உத்தரவிட்டு இது தொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Chennai High Court Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment