Advertisment

அரசு ஒதுக்கீடு இடங்களை தாங்களே நிரப்ப அனுமதிக்கோரி தனியார் பொறியியல் கல்லூரிகள் வழக்கு

தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களை அந்தெந்த கல்லூரிகளே நிரப்புவதற்கு அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai high court

தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களை அந்தெந்த கல்லூரிகளே நிரப்புவதற்கு அனுமதிக்க கோரியும், அந்த இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு அரசு சலுகைகளை வழங்க கோரியும் தனியார் கல்லூரிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.

Advertisment

ஆண்டுதோறும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 50 சதவீதம் இடங்களையும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 65 சதவீதம் இடங்களையும் கலந்தாய்வு மூலம் அரசு நிரப்புகிறது.

2007 முதல் 2016 வரையில் கலந்தாய்வு முடியும் போது லட்சக்கணக்கான இடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்கள் கடைசி நேரத்தில் திருப்பி அளிக்கப்படுகின்றன.

அதனால் கல்லூரிகளுக்கும், அரசுக்கும் இடையிலான இடபகிர்வு முறையை மாற்றி அமைக்கவும், அதுவரை பொறியியல் கலந்தாய்வுக்கு தடை விதிக்கவும் கோரி திருநெல்வேலி அண்ணா பல்கலைக் கழக சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், கல்லூரிகள் சங்கத்தின் சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில், தனியார் பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்யும் மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதால், அந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களை கலந்தாய்வு இல்லாமல், அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தனியார் கல்லூரிகளே நிரப்ப அரசு அனுமதி கோர நேற்று நடந்த சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதேபோல, அரசு ஒதுக்கீட்டு இடங்களில் தனியார் கல்லூரிகளால் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கட்டண சலுகை உள்ளிட்ட அரசு சலுகைகளை வழங்க வேண்டும் என அரசிடம் முறையிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான சலுகைகளை, நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கும் வழங்கவும் அரசை கேட்டுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதனால் இந்த மனுவை ஏற்று தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai High Court Student
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment