தமிழகத்தில் மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை மிகவும் மேசமாக உள்ளத நிலையில், இது குறித்து பதில் அளிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் தென் பகுதியில் மிக முக்கியமான மாவட்டம் மதுரை. தூத்தக்குடி கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் மதுரையை கடக்காமல் செல்ல முடியாது என்ற நிலை உள்ளது. இதனிடையே மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசகமான நிலையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து மதுரையை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு பொன்னாகுடி செங்குளம் பகுதியிலும், நாங்குநேரி சுங்கச்சாவடிக்கு உட்பட்ட மூன்றடைப்பு பகுதியிலும் சுமார் 3 ஆண்டுகளாக பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 4 கி.மீட்டர் வரை கரடு, முரடான பாதையில் வாகனங்கள் செல்ல வேண்டியதுள்ளது.
இதன் காரணமாக காலை, மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சுங்கச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. சுங்கச்சாவடியில் பணிபுரியும் பலர் மீது குற்றவழக்குகள் உள்ளன. விதிமீறல் குறித்து கேள்வி எழுப்பினால் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். போதிய மின் விளக்கு வசதி இல்லாததால் நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதி இருள் சூழ்ந்துள்ளது.
எனவே உரிய அடிப்படை வசதிகள் செய்யப்படும் வரை கயத்தாறு, நாங்குநேரி சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 'தேசிய நெடுஞ்சாலைத் துறை சாலைகளை முறையாக பராமரிப்பது இல்லை. ஆனால் சுங்கச்சாவடிகள் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை மிக மோசமான நிலையில் உள்ளதால், ஒரே இடத்தில் 14 விபத்துக்கள் நடந்துள்ளன. இது குறித்து குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.