Advertisment

உடனடி விஷமாக மாறும் மது : லால்குடி அருகே மேலும் இருவர் மது குடித்து பலி

மேல் சிகிச்சைக்காக முனியாண்டி என்பவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் என்பவரும் உயிரிழந்தார்.

author-image
WebDesk
New Update
Trichy

திருச்சியில்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி ஊராட்சியில் உள்ள 4வது வார்டு உறுப்பினர் முனியாண்டி (55), கூலி தொழிலாளி சிவக்குமார் (48) ஆகியோர் நேற்று மதியம் தச்சன்குறிச்சி மதுபான கடையில் மது வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது.

Advertisment

அதன் பின்னர் இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அதன் பின்னர் மேல் சிகிச்கைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி சிவகுமார் என்பவர் உயிரிழந்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக முனியாண்டி என்பவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் என்பவரும் உயிரிழந்தார். இவர்கள் இருவரும் நேற்று அப்பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது அருந்திய பின்னர் அவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் இருவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சமீபத்தில் தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறையில் மது அருந்தி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

விசாரணையில் மதுவில் சயனைடு கலந்திருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் அடங்குவதற்குள் திருச்சியில் இரண்டு பேர் மது குடித்து இன்று பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

க.சண்முகவடிவேல்  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Wine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment