Advertisment

'கண்ணில் மருந்து போட்டிருந்தேன்; தவறுதலாக ஃபார்வேர்ட் செய்து விட்டேன்': எஸ்.வி சேகர் மனுவை ஏற்காத உச்ச நீதிமன்றம்

கண்ணுக்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தபோது அவர் ஏன் சமூக ஊடகச் செய்தியை ஃபார்வர்டு செய்ய வேண்டும்?; எஸ்.வி சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Adjournment of judgment in SV Shekhar case

நடிகர் எஸ்.வி. சேகர்

பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பான அவதூறு செய்தியை பகிர்ந்தது தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது தொடரப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Advertisment

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு செய்தி ஒன்றை நடிகர் எஸ்.வி. சேகர் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. மேலும், பல்வேறு இடங்களில் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் தன் மீது தொடரப்பட்ட அனைத்து கிரிமினல் வழக்குகளையும் ரத்து செய்யக் கோரிய எஸ்.வி சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது, அந்தச் செய்தியை "வெறுக்கத்தக்கது" என்று கூறி, அந்த பதிவை மொழிபெயர்க்கக்கூட உயர் நீதிமன்றம் தயக்கத்தை வெளிப்படுத்தியது.

இதையும் படியுங்கள்: பெங்களூருவில் கார்கேவை சந்தித்த கே.எஸ் அழகிரி: ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் அணிவகுப்பு

மேலும், சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் வில்லில் இருந்து விடுபட்ட அம்புகள் போன்றது. அனுப்பியவுடன், அந்த செய்திகளால் ஏற்படும் சேதத்திற்கு அனுப்புநர் பொறுப்பேற்க வேண்டும். ஒருமுறை தீங்கு விளைவித்தால் மன்னிப்பு கேட்டால் போதாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டு, வழக்கை ரத்து செய்ய மறுத்தது.

இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் தொடர்ந்த மனு, நீதிபதி பி.ஆர். கவாய், பி.கே. மிஷ்ரா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ​​எஸ்.வி. சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகமுத்து, எஸ்.வி.சேகர் கண்ணுக்கு மருந்து போட்டுக்கொண்டு இருந்தபோது தவறுதலாக அவரது கை விரல்கள் ‘அனுப்பு’ பட்டனை அழுத்திவிட்டதாகவும், அதன் காரணமாகவே அந்தச் செய்தி ‘ஃபார்வர்டு’ ஆகிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

அதற்கு நீதிபதிகள், "கண்ணுக்கு மருந்து போட்டுக்கொண்டிருந்தபோது அவர் ஏன் சமூக ஊடகச் செய்தியை ஃபார்வர்டு செய்ய வேண்டும்?" என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நாகமுத்து, "சமூக ஊடகங்கள் வாழ்வின் ஓர் அங்கமாக ஆகிவிட்டதாகவும், அதை தவிர்ப்பது கடினம்” என்றும் கூறினார்.

அதற்கு நீதிபதிகள், சமூக ஊடகங்கள் மிகவும் அவசியம் என தாங்கள் கருதவில்லை, சமூக ஊடகங்களில் இருந்து நாங்கள் விலகி இருக்கிறோம். எஸ்.வி.சேகருக்கு என்ன வயது என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு, அவருக்கு 72 வயதாகிறது என நாகமுத்து தெரிவித்தார்.

அப்போது, ​​"இந்த வயதில்தான் அவர் இதை எல்லாம் செய்கிறாரா? அவர் ஏன் சமூக ஊடக செய்தியை அனுப்ப வேண்டும்? சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவில் தலையிட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், அவருக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை ரத்து செய்ய மறுத்துவிட்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Sv Sekar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment