Advertisment

இரண்டு நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும்: சென்னை வானிலை மையம்

தென் தமிழகத்தில் கனமழையும், வடதமிழகப் பகுதிகளில் மிதமான மழையும் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இரண்டு நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும்: சென்னை வானிலை மையம்

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலைகொண்டுள்ளதால், தென் தமிழகத்தில் கனமழையும், வடதமிழகப் பகுதிகளில் மிதமான மழையும் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிசம்பர் 31-ம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை நீடிக்கும் என்ற போதிலும், கடந்த வாரம் வறண்ட வானிலையே நீடித்தது. இந்நிலையில், கடந்த 27-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையால் மீண்டும் பருவமழை தீவிரமடையத் தொடங்கியது.

தற்போது, அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையால், சென்னை கடல்பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) தமிழகத்தில் பல இடங்களிலும், புதுவையில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். தென் தமிழகத்தில், குறிப்பாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment