Advertisment

தீவிரவாதத்தை தடுக்க மாநில அளவில் புதிய பிரிவு : தமிழக அரசு அரசாணை வெளியீடு

தீவிரவாதத்தை தடுக்க மாநில அளவில் புதிய பிரிவை ஏற்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

author-image
WebDesk
New Update
sava

தீவிரவாதத்தை தடுக்க மாநில அளவில் புதிய பிரிவை ஏற்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Advertisment

தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுவோரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை மட்டுமே விசாரணை நடத்தும் சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் தீவிரவாத  நடவடிக்கைகளில் ஈடுபடுபோரை விசாரிக்க மாநில அளவிலேயே புதிய பிரிவை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஒரு டி.ஐ.ஜி, 4 எஸ்.பி.க்கள், 13 டி.எஸ்.பி.க்கள், 31 ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 383 பேர் இந்த பிரிவின் கீழ் செயல்படுவார்கள் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுண்ணறிவு பிரிவு ஏ.டி.ஜி.;பிக்கு கீழ் இந்த பிரிவு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுவோரை சிறப்பு பிரிவு மட்டுமே விசாரிக்கும் சூழலில் தீவிரவாதத்தை தடுக்க மாநில அளவில் புதிய பிரிவு ஏற்படுத்தப்பட உள்ளது குறிப்பிடதக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment