Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதீங்க; ஒரு அப்பாயின்ட்மென்ட் மட்டும் கொடுங்க: பிரதமருக்கு சித்தராமையா கடிதம்

காவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதீங்க; ஒரு அப்பாயின்ட்மென்ட் மட்டும் கொடுங்க: பிரதமருக்கு சித்தராமையா கடிதம்

காவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் இல்லை என்றும், காவிரி மேலாண்மை வாரியம் என்பது அரசியலமைப்பில் இல்லை என்றும் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார். மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நடுவர் மன்றமும் சொல்லவில்லை என்று சித்தராமையா பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி பிரச்சினையை தீர்க்க ஒரு திட்டத்தை உருவாக்கும் படியே தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாகவும், திட்டம் அமைப்பது குறித்து பிரதமருக்கு கர்நாடகம் ஏற்கனவே வரையறை செய்து கடிதம் அனுப்பியுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் கர்நாடகத்தின் வரைவின் படியே ஒரு திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து நேரில் சந்திக்க எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment