கனமழை காரணமாக வால்பாறை பகுதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் கன மழை பெய்து வருகிறது. வால்பாறையிலும் இரண்டு நாட்களாக கொட்டித் தீர்க்கும் கன மழையால், இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தொடர் மழை காரணமாக வால்பாறை வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.