Advertisment

கனமழை மற்றும் புயல்: சென்னை, குமரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடரும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
,Heavy Rain,school,colleges

தொடரும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஓகி புயல் பாதிப்பு காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தொடரும் கனமழை காரணமாக, சென்னை, தேனி, திண்டுக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும், மதுரை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கனமழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, இளையான்குடி, திருபுவனம் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, கோத்தகிரி, குந்தா பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment