வீடியோ - தஞ்சை பாலாஜி
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருது கணேஷ் நேற்று வீடு வீடாக சென்று மக்களிடம் ஓட்டு கேட்டார்.
அப்போது, வயதான பெண்மணி ஒருவர் மருது கணேஷுக்கு ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்த போது, திடீரென அப்பெண்மணி நிலைத் தடுமாறி மயங்கினார். இதனால், மருதுகணேஷ் உட்பட அருகில் இருந்த அனைவரும் சில நொடிகள் ஜெர்க் ஆகிவிட்டனர். உடனே, அவரை திமுகவினர் தாங்கிப் பிடிக்க ஸ்டெடியான அப்பெண், அதன்பின் தேங்காய் உடைத்து தனது கடமையை செவ்வனே செய்து முடித்தார்.
இதையடுத்து, போன இடத்தில் வில்லங்கம் ஏதும் ஆகிடாம வேலையை பாருங்கப்பா என அறிவுறுத்தியதாம் தலைமை கழகம்...
அந்த வீடியோ இது.