69வது குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்தியா குடியரசு நாடாக ஆகி, இன்றுடன் 69 ஆண்டுகள் ஆகின்றன. எனவே, நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் டெல்லியில் நடைபெற்றுவரும் விழாவில், முதன்முறையாக ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் அரசியலில் இறங்கியிருக்கும் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் ட்விட்டரில் நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். “வாழ்க நம் குடியரசு” என ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், ஆங்கிலத்திலும் தன்னுடைய வாழ்த்தைப் பதிவு செய்துள்ளார்.
“ஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துகள்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.