Advertisment

அனிதா தற்கொலை செய்ய தூண்டப்பட்டார்... சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: கிருஷ்ணசாமி

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக, இந்திய தேசத்திற்கு எதிராக திட்டமிட்டு தவறான தகவல்களை சில கும்பல்கள் பரப்பி வருகின்றனர்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
K Krishnasamy

நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், அனிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், எனவே சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. அனிதாவின் தந்தை மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருக்கிறார். அனிதா பன்னிரெண்டாம் வகுப்பில் 1,176 மதிப்பெண்கள் எடுத்தார். 196.5 கட்- ஆஃப் கொண்டிருந்த அனிதா, மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வெழுதினார். ஆனால், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் எடுத்தார். நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தினால், தம்மைப்போன்ற கிராமப்புற மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாது என தொடர்ந்து போராடியவர் அனிதா.

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை இயற்றியது.

ஆனால், இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், கலந்தாய்வு நடத்தி மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என சி.பி.எஸ்.இ மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் மாணவி அனிதா எதிர்மனுதாரராக தன்னை இணைத்துக் கொண்டார். இருப்பினும், அந்த வழக்கில் தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனால், மாணவி அனிதாவுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மாணவி அனிதா வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்காததால், கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

நீட் தேர்வுக்காக தன் ஏழ்மை நிலையிலும் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு, காரணம் மத்திய, மாநில அரசுகள் தான் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. அனிதாவின் இந்த முடிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Anitha - NEET - Kavitha muralidharan

ஆரம்பம் முதலே அனிதா தற்கொலையில் சர்ச்சைக் கருத்துகளை தெரிவித்துவருவதால் கிருஷ்ணசாமிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது, நீட் தேர்வின் வாயிலாகவே மருத்துவ படிப்பு என்று தெரிந்த பின்னர் தான், மாணவி அனிதா அதில் கலந்து கொண்டு தேர்வு எழுதினார். இதன் மூலம் நீட் தேர்வில், அவர் 86 மதிப்பெண் பெற்றிருந்தார்.

அவரை சுயமாக விட்டிருந்தால், அவர் தன்னை அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மருத்துவராக ஆகியிருக்கக் கூடும், பொறியியல் படிப்பை தொடர்திருக்க முடியும், அல்லது வேளாண்மை பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிலையங்களில் படித்திருக்க முடியும். ஆனால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக, இந்திய தேசத்திற்கு எதிராக திட்டமிட்டு சில தவறான தகவல்களை சில கும்பல்கள் பரப்பி வருகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தின் அடிப்படையில் தாங்கள் தோல்வியுற்றதாக கருதி, எந்த சிறு வாய்ப்பையும் மத்திய அரசு, மாநில அரசு, நீட் தேர்வு ஆகியவற்றிற்கு எதிராக திருப்புவதற்கு எதிரான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டே சிலர் காத்திருந்துள்ளனர். அதன்படி, எப்படியோ, அரியலூர் மாணவி அனிதாவை டெல்லி வரை அழைத்து சென்று, உச்ச நீதிமன்றத்திலே வழக்கு போட வைத்தனர். இந்த வழக்கில் அவர்கள் வெற்றிபெற முடியவில்லை.

குன்னம் தொகுதி, திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர், கல்வியாளர் என்று தன்னைத்தானே பட்டம் சூட்டிக் கொள்ளும் கஜேந்திர பாபு ஆகியோர் இந்த மாணவியின் மரணத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுகிறது.

நீட் தேர்வுக்கு எதிராக அனிதாவை ஒரு ‘ப்ராண்ட்’-ஆக மாற்றுவதற்கு குன்னம் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன், கஜேந்திரபாவு ஆகியோர் முயற்சித்துள்ளனர்.அந்த மாணவி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால், யதார்த்தமாக மட்டுமே பேச முடியும், ஆனால் சென்னையில் இருந்து(ஓரு ஆலயத்தில்) எழுதி கொடுக்கப்பட்ட கதை, வசனம் , டைரக்சன் படி அந்த மாணவியால் பேசமுடியவில்லை. நீட் தேர்வை எதிர்த்து சரியாக பேட்டி அளிக்கவில்லை. இதேபோல சென்னையில் வந்தும் பேட்டி அளிக்க முடியவில்லை. அதில் விரக்தி ஏற்பட்டுள்ளது.

anitha,- s.s.sivasankar, neet

ஒரு திரைப்படத்தில் ஒரு நடிகை, நடிகரோ சரியாக நடிக்கவில்லை என்றால் எப்படி திட்டு வாங்குவார்களோ, அதைபோல அந்த மாணவியை அநாகரிகமான வார்த்தைகளால் கஜேந்திர பாபுவும், சிவ சங்கரனும் திட்டியிருக்கிறார்கள். “நீ என்ன செய்யப் போகிறார்” என்று தொடர்ந்து கூறி வற்புறுத்தியதனால், தனக்கு இதற்கு மேல் வாழ்க்கை இல்லை என்று நினைப்பதற்கு அந்த மாணவி தள்ளப்பட்டிருக்கிறார்.

“நீ என்ன செய்யப் போகிறார்” என்பதன் பொருள் இதைத்தான் செய், தற்கொலை செய், உன்னை வைத்து நீட் தேர்வுக்கு எதிராக கலவரத்தை செய்ய வேண்டும் என்ற திட்டத்தோடு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனை மத்திய, மாநில அரசு எளிதாக விட்டுவிடாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

Dmk Supreme Court Cbi Anitha Prince Gajendra Babu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment