ஆர்.கே.நகர் சட்டசபை இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், டிடிவி ஆதரவாளரும், அதிமுக அம்மா அணியின் செய்தித் தொடர்பாளருமான சி.ஆர்.சரஸ்வதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாங்கள், இரட்டை இலை சின்னம் அல்லது தொப்பி சின்னம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், பிரஷர் குக்கர் சின்னம் கிடைத்துள்ளது. இதுவும் எங்களுக்கு மகிழ்ச்சி தான். ஏனெனில், அதிமுகவின் பெரும்பாலான ஆதரவு பெண்களிடம் இருந்து தான். அந்த பெண்கள், வீடுகளில் அதிகளவு பயன்படுத்தும் பிரஷர் குக்கர் சின்னமாக கிடைத்திருப்பது கடவுளின் வரம் தான். இது கடவுள் கொடுத்த சின்னம்" என்றார்.
வீடியோ - தஞ்சை பாலாஜி