Advertisment

ஓ.பன்னீர்செல்வம் அணி 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : அரசு தரப்புக்கு அவகாசம்

ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திமுக தொடர்ந்த வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
deputy cm o.panneerselvam, aiadmk, tamilnadu government, dmk, m.k.stalin, chennai high court, gutkha, ops faction 11 mla's disqualification case

ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திமுக தொடர்ந்த வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

Advertisment

ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது அணியாக தனியாக இயங்கிய 11 எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய சிக்கல் எழுந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் போது, அரசு கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்ததுதான் அந்தப் பிரச்னை! அது தொடர்பாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், செம்மலை, க.பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ. க்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கொறடா அர.சக்கரபாணி வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கான வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தன. ஆனால், இதை அவர் நிராகரித்து விட்டார். சபையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறி, திமுக உறுப்பினர்களை சபையை விட்டு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால், திமுக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

ஆனால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் ஆறுக்குட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், கே. பாண்டியராஜன், மனோரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ், ஆர். நடராஜ் ஆகியோர் அரசு கொறடா உத்தரவை மீறி வாக்களித்து உள்ளனர். அருண்குமார் எம்.எல்.ஏ. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார். இதற்காக அவர் சார்ந்த கட்சியிடமும் அவர் அனுமதி பெறவில்லை.

அரசு கொறடா உத்தரவுக்கு எதிராக நடந்து கொண்ட ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ. க்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முருகுமாறன், தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், பார்த்திபன் ஆகியோர் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர். ஆனால், அதன் மீது சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே, அரசு கொறடா உத்தரவுக்கு எதிராக நடந்து கொண்ட 12 எம்.எல்.ஏ. க்கள் மீது தமிழக சட்டமன்ற விதிகள் 1986 ல் கூறப்பட்டுள்ள தகுதி நீக்கம் தொடர்பான பிரிவுப்படி, நடவடிக்கை எடுக்கும்படி, சபாநாயகர், சட்டமன்ற செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் ' என்று மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்பேரவை செயலாளர் சார்பில் ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தங்களின் தரப்பு பதில் அளிக்க கூடுதல் கால அவகாசம் தேவை என கோரினார். மேலும் பதில் அளிக்க குறைந்தது மூன்று வாரங்கள் தேவை எனவே விசாரணை நவம்பர் மாதம் 2 ஆம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என கூறினார்.

இதற்கு திமுக சார்பில் ஆஜரான முத்த வழக்கறிஞர் கபில் சிபல் எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே பதில் அளிக்க உத்தரவிடபட்டுள்ளது. எனவே விரைவாக பதில் அளிக்க உத்தரவிட வேண்டும் என கூறினார்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதி இந்த மனு குறித்து பதில் அளிக்கும்படி சபாநாயகர், சட்டசபைச் செயலாளர் ஆகியோருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் தங்கள் பதில் மனுவை அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை அன்றைய தேதிக்கு (27.10.2017) தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

 

Chennai High Court Dmk Tamilnadu Assembly M K Stalin Speaker Dhanapal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment