தமிழக சட்டசபையில் இந்த வாரத் தொடக்கத்திலிருந்தே பல்வேறு விவரங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து திமுக மற்றும் அதிமுக இடையே பலத்த விவாதம் நடந்தது.
திமுக எம் எல் ஏ பிச்சாண்டி இன்று சிறுகதை மூலம் மறைமுகமாக அதிமுக-வினரை குற்றம் சாட்டினார். இக்கதையின் மூலம் பாஜக-வுடன் அதிமுக நட்பாக உள்ளது. இதனால் தான் காவிரி மேலாண்மை குறித்து எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை என்றார்.
பிச்சாண்டியின் பேச்சிக்குப் பதிலடி கொடுத்த முதல்வர் பழனிச்சாமி, “எங்களுக்கு பாஜகவுடன் கூட்டும் இல்லை ஆதரவுமில்லை” என்று தெரிவித்தார். தமிழகத்திற்காக அதிமுக எப்போதும் வாதாடி வருவதாகவும் கூறினார்.
பின்னர் திமுகவினர் கூறிய இந்தக் கதை திமுகவுக்கே பொருத்தமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
இறுதியாக கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நிலவி வருகிறது. இதனால் இந்த விவகாரம் குறித்து திமுக எப்போதாவது சோனியாவிடம் கோரிக்கை வைத்துள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.