Advertisment

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: முன்விடுதலை கோரிய நளினி மனு தள்ளுபடி!

முன்விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய நளினி மனு தள்ளுபடி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: முன்விடுதலை கோரிய நளினி மனு தள்ளுபடி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள தன்னை முன்விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய நளினி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, ராபர்ட்  பயஸ் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு சட்டப்பேரவையில் 2014 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது.  இதை எதிர்த்து மத்திய தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நளினி சார்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில், நான் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகின்றேன்.ஒரு குற்ற வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை நிறைவு செய்தவர்களை முன் கூட்டி விடுதலை செய்யலாம் என தமிழக அரசு கடந்த 1994 ஆம் ஆண்டு  அரசு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அரசாணை படி  தன்னை முன்கூட்டி விடுதலை செய்ய கோரி 2015 ஆம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சத்தியநாராயணன், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் எனது  கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்கும்படி, 2016 ஆம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனால் தமிழக அரசின் அரசாணை படி முன் விடுதலை செய்ய மறுத்துவிட்டார்.

எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் தமிழக அரசாணை படி விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

நளினி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், ஆர். சுப்ரமணியம் அடங்கிய அமர்வு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு கடந்த திங்கள்கிழமை இறுதி  விசாரணைக்கு வந்த போது. நளினி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் சாசனம் 161-ன் படி   சிறையில் உள்ள கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் இவர்கள் விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க எந்த தடையும் இல்லை. இந்தே  அரசாணையின் அடிப்படையில் 2200 ஆயுள் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே மனுதரார் விடுவிக்க வேண்டும் என வாதிட்டார்.

தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்கபடும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை எதிர்ப்பு மத்திய அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது அதனால் தமிழக அரசால் எந்த முடிவும் எடுக்க இயலாத நிலையில் இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 27 ஆம்  தேதிக்கு  நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சசிதரன் தலைமையிலான டிவிசன் பெஞ்ச், மத்திய அரசு மட்டுமே சட்டம் இயற்ற அதிகாரம் கொண்ட வெடிபொருள் சட்டத்தில் நளினி தண்டனை பெற்றுள்ளதால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்ற அரசின் வாதத்தை ஏற்பதாகவும். மேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரை விடுதலை தொடர்பான  வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவை உள்ளது. அந்த வழக்கில் எந்த முடிவும் எடுக்காத நிலையில் விடுதலை செய்ய உத்தரவிட முடியாது எனவே தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்வதாகவும் நளினியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வாக உத்தரவிட்டனர்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment