Advertisment

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க, ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்க அதிகாரிகள் பயந்தனர்: ஸ்டாலின்

2015ம் ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க, ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்க அதிகாரிகள் பயந்தனர் என்று முதலவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sada

2015ம் ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க, ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்க அதிகாரிகள் பயந்தனர் என்று முதலவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை திமுக நிர்வாகி பிகே மூர்த்தி இல்ல திருமண விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின்  பேசினார். அப்போது அவர் பேசியதாவது “ திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு செயலாற்றும் கட்சி. கொரோனா காலத்தில் திமுக எதிர்கட்சியாக  இருந்தபோது, மக்களை தேடி போய் உதவியது.

2015ம் ஆண்டு முதலமைச்சராக  ஜெயலலிதா இருந்தபோது, செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 2015ம் ஆண்டு ஏரியை திறக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்க அதிகாரிகள் பயந்தனர். 2015ல் கொஞ்சம் கொஞ்சமாக ஏரியை திறந்திருந்தால், பலரும் உயிரிழக்காமல் இருந்திருப்பார்கள். 2015யை விட தற்பொது அதிக மழை பெய்த போதிலும் மக்களை மீட்டுள்ளது திமுக அரசு. தகுதியுள்ள அனைவருக்கும் ரூ. 6 ஆயிரம் தொகை வழங்கப்படும். மழை பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுவினரே தமிழக அரசை பாராட்டி உள்ளனர். ” என்று அவர் பேசியுள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment