Advertisment

நொடிப்பொழுதில் கூட ஆட்சி மாற்றம் ஏற்படலாம்: மு.க ஸ்டாலின்

விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று கூறுவது போல அல்லாமவ், நொடிப்பொழுதில் கூட ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார் மு.க ஸ்டாலின்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMK, AIADMK, Tamilnadu Government, Dengue fever, Minister C vijayabaskar,

தஞ்சையில் திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் திருமண விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது: விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று கூறுவது போல அல்லாமவ், நொடிப்பொழுதியில் கூட ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே ஆளுங்கட்சில் இருந்து சட்டமன்ற உறுப்பினக்ள் 19-பேர் முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி, ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்திருக்கிறார்கள். ஆளுங்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களே, முதலமைச்சருக்கு ஆதரவு இல்லை என்று கூறியுள்ள நிலையில், மெஜாரிட்டி இல்லாத ஒரு மைனாரிட்டி ஆட்சியாக தமிழ்நாட்டில் இந்த ஆட்சி இருந்து வருகிறது.

Advertisment

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநருக்கு கடிதம் அனுப்பினேன். அது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் தலைமையில் திமுக, காங்கிரஸ் தோழமை கட்சிகள் இணைந்து ஆளுநரை சந்தித்து விவரித்துள்ளோம். இதன்பின்னர், குடியரசுத் தலைவரை சந்தித்து திமுக மட்டுமல்லாமல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஒன்றாக சேர்ந்து விளக்கம் அளித்து வந்திருக்கிறார்கள். ஆனால், இதுவரையும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதன்பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எத்தனை பேர் என்பதை அமைச்சர்களே தெரிவிக்கின்றனர். 234 தொகுதிகளில் கொண்ட தமிழகத்தில் 117 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தால் தான் மெஜாரிட்டி ஆட்சியாக இருக்க முடியும். ஆனால், அந்த எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் 109 பேர் தான் கலந்து கொண்டனர் என அமைச்சர்களே தெரிவிக்கின்றனர். தற்பேதைய நிலையில், டிடிவி தினகரன் அணியில் 20-க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள்.

வருகிற 10-ம் தேதி திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். அநேகமாக 10-ம் தேதி ஆளுநரை சந்திக்க நேரம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். எதிர்கட்சித் தலைவர் நேரம் கேட்கும்போது ஆளுநர் அதற்கு நேரம் கொடுத்தாகதான் வேண்டும்.

இந்த சந்திப்பின்போது, மெஜாரிட்டிஜை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்பதை கோரிக்கை வைக்கப்போகிறோம். அதற்காக குறிப்பிட்ட காலத்தையும் நிர்ணயிக்கப் போகிறோம். நாங்கள் குறிப்பிட்டிருக்கின்ற கால நிர்ணத்திற்குள் ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆட்சியை இறக்க சட்டநீதியாக மட்டுமல்லாமல் பொதுமக்களை ஒன்றுதிரட்டி போராடுவோம்.நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அல்ல. நாங்கள் பார்க்காத பதவிகள் அல்ல. நான் வகிக்காத பொறுப்புகளும் அல்ல, அது வேறு. மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்பதற்காகவே பதவிகளும், பொறுப்புகளும் உள்ளன.

ஆனால், தற்போது நாடு குட்டிச்சுவராக மாறிக்கொண்டிருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டுள்ளன. நெடுவாசல்,கதிராமங்கலம், விவசாயிகள், நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்தியாவில் முதல் பெண்மணி ஒருவர் மருத்துவராக வந்தது தமிழகத்தில் இருந்து தான். அப்போது அவர் என்ன நீட் தேர்வு எழுதிவிட்டா டாக்கடருக்கு படித்தார்? தமிழகத்தில் தான் அரசு மருத்துவமனைகள் அதிகம் உள்ளது. வேண்டுமென்றே, தமிழகத்தை வஞ்சிக்கின்ற நோக்கத்தில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. ஏழை எழிய மக்கள், கிராப்புற மக்கள் படித்து மருத்துவராகிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது இந்த மத்திய அரசு என்று கூறினார்.

Mk Stalin Dmk Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment