குட்கா விவகாரத்தில் எவ்வாறு விஜயபாஸ்கர் செயல்பட்டாரோ, அதுபோல தான் கொசுக்களிடம் மாமூல் பெற்றுக்கொண்டு டெங்குவை விஜயபாஸ்கர் பரப்புவதாக நினைக்கிறேன் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வேடிக்கையாக கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறும்போது:
கேள்வி: டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் அதிகமாக பரவி வருகிறது. டெல்லியில் இருந்து ரயில் மூலமாக டெங்கு பரவியதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறாரே?
பதில்: குட்கா விவகாரத்தில் எவ்வாறு மாமூல் கொடுத்தாரோ, அதுபோல கொசுவிடம் மாமூல் வாங்கிக்கொண்டு டெங்குவை பரப்புகிறார் என்று நினைக்கிறேன்.
கேள்வி: பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அது குறித்து?
பதில்: பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறித்து மத்திய அரசும், மாநில அரசும் அமர்ந்து பேச்சுவார்த்தையில் பேசி முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.