தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. உழவர்களுக்கு உதவியாக இருக்கும் மாட்டுகளுக்கு பூஜைப் போட்டு நன்றியை செலுத்தினர்.
தமிழகம் முழுவதும் நேற்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலையிலேயே வீடுகளில் பொங்கலிட்டு சூரியனுக்கு படையல் போட்டு, புத்தாடை அணிந்து கொண்டாடினார்கள்.
விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் காளை மாடுகளுக்கு இன்று காலையிலேயே குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம்பூசி, பொங்கலிட்டு மாட்டுப் பொங்கலை கொண்டாடினார்கள். கிராமங்களில் வீடுகள், குளங்களில் மாடுகளை குளிப்பாட்டினார்கள்.
மதுரை பகுதிகளில் ஜல்லிக்கட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை, சேலம், தஞ்சை பகுதிகளிலும் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.