தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து கூறி அசத்தியுள்ளார்.
தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வரும் ஆண்டில் தமிழர்களின் விருப்பங்கள், விளைவுகள் அனைத்தும் ஈடேற விரும்புகிறேன்" என தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
,
,
,