Advertisment

கொடநாடு சம்பவத்திற்கு இ.பி.எஸ் வீட்டில் சதித் திட்டம்: விசாரணைக்கு ஆஜரான தனபால் பேட்டி

'சென்னையில் உள்ள எடப்பாடி வீட்டில் தான் சதித் திட்டம் போடப்பட்டது. இளங்கோவன், வேலுமணி. தங்கமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.' என்று தனபால் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
 Kodanad Murder Case: Kanagaraj brother Dhanapal press meet at Coimbatore

'எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி முன்னே வந்தவர். நேரடியாக எதும் செய்யமாட்டார். சுதாகர் ஐ.ஜி நடத்திய விசாரணையில் திருப்தி இல்லை.' என்று தனபால் தெரிவித்தார்.

Coimbatore | kodanad Murder Case | edappadi-k-palaniswami: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் கனகராஜின் சகோதரர் தனபால் இரண்டாம் கட்ட விசாரணைக்கு  ஆஜரானார். 

Advertisment

இந்த விசாரணைக்கு செல்லும் முன்பு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியது பின்வருமாறு:- 

முதல் கட்ட விசாரணையில் 40 மேற்பட்ட கேள்விகள் கேட்டிருந்தார்கள். இன்று இரண்டாம் கட்ட விசாரணையில் மீதி கேள்வி கேட்க இருக்கின்றனர். கனகராஜ் எடுத்து வந்த பைகள் யாரிடம் கொடுத்தார்கள் என்பது குறித்தும் தெரிவித்துள்ளேன். இதேபோல பல கொலைகளை பழனிச்சாமி செய்திருக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி சொல்லி தான் கனகராஜ் இந்த சம்பவங்களை செய்தார். இதை என் தம்பி என்னிடம் சொல்லி இருக்கின்றார்.

இதற்கு முன்னர் விசாரணை நடத்திய அதிகாரியை விலைக்கு வாங்கி விட்டனர். இப்போது நேர்மையான அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி, இளங்கோவன், தங்கமணி ,வேலுமணி ஆகியோர் கனகராஜை நேரடியாக மூளை சலவை செய்து இந்த விவகாரத்தில் ஈடுபடுத்தினர். 

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி முன்னே வந்தவர். நேரடியாக எதும் செய்யமாட்டார். சுதாகர் ஐ.ஜி நடத்திய விசாரணையில் திருப்தி இல்லை. விசாரணையில் என்னை அடித்து துன்புறுத்தினார்கள்.  தி.மு.க ஆட்சியில் மேல்மட்ட அதிகாரிகள் மட்டும் தான் மாறி உள்ளனர். கீழ் மட்ட அதிகாரிகள் இன்னும் எடப்பாடி பழனிசாமிக்குதான் பணி செய்து வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் எத்தனை நாள் விசாரணை நடத்தினாலும் பதில் சொல்ல நான் ரெடியாக இருக்கின்றேன்.

சென்னையில் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் 5 நாட்கள் கனகராஜை மூளை சலவை செய்தார்கள். அனைத்து உதவியும் செய்வதாக கனகராஜிடம் சொல்லி இருக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமியை விசாரித்தால் எல்லாம் உண்மைகளும் தெரியவரும். சென்னையில் உள்ள எடப்பாடி வீட்டில் தான் சதித் திட்டம் போடப்பட்டது. எடப்பாடியுடன் இளங்கோவன், வேலுமணி. தங்கமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும். அவரை விசாரிக்க சம்மன் அனுப்ப வேண்டும் 

இவ்வாறு தனபால் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Edappadi K Palaniswami Kodanad Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment