Advertisment

யானை தாக்கியதில் பத்திரிக்கை நிரூபர் மரணம் : கேரளாவில் சோகம்

யானைகளை போட்டோ எடுக்க சென்றிருந்த பத்திரிக்கை நிரூபர் யானை தாக்கி மரணமடைந்தார்.

author-image
WebDesk
New Update
Mugesh Death

போட்டோ ஜானர்லிஸ்ட் முகேஷ்

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஏ.வி.முகேஷ் (34). பாலக்காடு மாவட்ட மாதர்பூமி பத்திரிகையின் தலைமை போட்டோகிராபராக பணியாற்றி வரும் இவர் இன்று காலையில் பாலக்காடு பக்கம் உள்ள கோட்டைக்காடு பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதை அறிந்து அங்கு புகைப்படம் எடுக்க சென்றார்.

Advertisment

அப்போது அங்குள்ள ஆற்றை யானைகள் கடக்கும் போது புகைப்படம் எடுத்துக் அவரை அங்கிருந்த ஒரு யானை தாக்கியது. இதில் முகேஷ் படுகாயம் அடைந்த நிலையில், சிகிச்சைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பலனின்றி உயிரிழந்தார்.

முகேஷ் டெல்லியிலும் ,மாதர் பூமி பத்திரிகையின் தலைமை போட்டோகிராபராக பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு பாலக்காட்டில் உள்ள பத்திரிகையாளர்கள் சங்கங்களும்,கோவையில் உள்ள சீனியர் ஜெனர்லிஸ்ட் கிளப்,உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் சங்கங்கள் அனுதாபம் தெரிவித்துள்ளது. யானை தாக்கி பலியான புகைப்பட நிபுணர் குடும்பத்துக்கு கேரள அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

coimbotore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment