Advertisment

“ரஜினியுடன் கூட்டாக நின்று தேர்தலை சந்திப்பது தேவையா?”: கமல்ஹாசன் கேள்வி

வார இதழ் ஒன்றில் தான் எழுதிவரும் கட்டுரைத் தொடரில், ரஜினியுடன் கூட்டாக தேர்தலை சந்திப்பது குறித்த கேள்வி இருவரையும் துரத்துவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cauvery Management Board, Sterlite, Tamil Cinema Actors Protest

Cauvery Management Board, Sterlite, Tamil Cinema Actors Protest

நடிகர் ரஜினிகாந்துடன் கூட்டாக நின்று தேர்தலை சந்திப்பது தேவையா என நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வார இதழ் ஒன்றில் தான் எழுதிவரும் கட்டுரைத் தொடரில், ரஜினியுடன் கூட்டாக தேர்தலை சந்திப்பது குறித்த கேள்வி இருவரையும் துரத்துவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்த கேள்விக்கு காலம் பதில் சொல்லும் என ரஜினி கூறிய கருத்தை தான் வழிமொழிவதாக, ஏற்கனவே அறிவித்திருந்ததாகவும் கமல்ஹாசன் நினைவு கூர்ந்துள்ளார்.

இருவரும் கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்றும், இருவருடைய கொள்கைகளும் பொருந்துகிறதா என பார்க்க வேண்டும் என்றும், அதனால் இது இப்போது எடுக்கக்கூடிய முடிவல்ல என்றும், தேவையா என்பதை இருவருமே யோசிக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment