Advertisment

'ரஜினிகாந்த் வெற்றிடத்தை நிரப்புவாரா என்பதை நானும் பார்க்கிறேன்' - கமல்ஹாசன் 'நச்'!

ஐயோ! நான் அவருக்கெல்லாம் கற்றுத் தரவில்லை. அவரே நல்லா அரசியல் பேசுவார்.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
'ரஜினிகாந்த் வெற்றிடத்தை நிரப்புவாரா என்பதை நானும் பார்க்கிறேன்' - கமல்ஹாசன் 'நச்'!

கோவை, ஈரோடு மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கமல் உரையாற்றினார்.

Advertisment

இதைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில், பல கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார். அதன் விவரம் பின்வருமாறு,

கேள்வி: ராஜீவ் காந்தி கொலையாளிகளை முழுமையாக மன்னித்துவிட்டேன் என ராகுல் காந்தி கூறி இருக்கிறாரே?

பதில்: அது அவருடைய மனித நேயம். ஆனால், நாம் கேட்பது சட்டத்தில் தளர்வு.

கேள்வி: தமிழகத்தில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை என்னால் தான் நிரப்ப முடியும் என ரஜினிகாந்த் கூறியிருக்கிறாரே. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: நான் பார்க்கிறேன்... அவ்வளவு தான். அதை அவர் சொல்கிறார்... அவ்வளவு தான்.

கேள்வி: தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து உங்கள் பயணத்தைப் பற்றி விமர்சித்து வருகிறார்களே!

பதில்: அது செய்ய வேண்டியது தானே! ஏனெனில், நான் அவர்களை பற்றி மிக நேர்மையாக விமர்சனம் செய்திருக்கிறேன். நேர்மை இல்லையென்றாலும், விமர்சனம் செய்ய வேண்டியது அவர்களது மறுகடமை.

கேள்வி: காவிரி விவகாரத்தில் எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கருத்துக்கு உங்கள் பதில் என்ன?

பதில்: செய்யலாம்... செய்யனும்.

கேள்வி: அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளீர்களே?

பதில்: ஆம்! நான் ஆதரவு கொடுத்திருக்கிறேன். மூன்றாவது தலைமுறையாக தொடர்ந்து இந்த குடிநீர் பிரச்சனை அங்கு நிலவி வருகிறது. ஒரு மாநில அரசு மட்டும் இதில் சம்பந்தப்பட்டு இல்லை.

கேள்வி: கிறிஸ்துவ மிஷனரிகளில் இருந்து நீங்கள் நிதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதே?

பதில்: இதற்கு சிரிப்பதைத் தவிர நான் வேறு ஒன்றும் செய்ய முடியாது. தான்தோன்றித் தனமாக கதை புனைவர்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது.

கேள்வி: பெரியார் வீட்டிற்கு ஏன் சென்றீர்கள்?

பதில்: அது என் தந்தையின் வீடு.

கேள்வி: ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் படித்த தொடக்கப் பள்ளியில் உங்களை உள்ளே அனுமதிக்கவில்லையே. உங்கள் மனநிலை அப்போது எப்படி இருந்தது?

பதில்: அதற்காகத் தான் இப்போது ஒரு பள்ளிக்கு சென்று வந்துள்ளேன். பெரியாரின் வீடு அது.

கேள்வி: அரசியலுக்காக சினிமாவை விட்டு விலகுகிறேன் என்று சொல்லி உள்ளீர்களே?

பதில்: இருப்பதை முடித்துவிட்டு தான் விலகுகிறேன்.

கேள்வி: தமிழ்நாட்டில் இப்போது ஆளாளுக்கு கட்சி தொடங்கப் போகிறேன் என்கிறார்களே?

பதில்: கட்சி தொடங்குவதில் எந்தத் தவறும் இல்லை. நாட்டில் 2000க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.

கேள்வி: இளைஞர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று ரஜினிகாந்த் கூறி இருக்கிறாரே?

பதில்: அவர்கள் தான் அஸ்திவாரமே!

கேள்வி: கட்சி ஆரம்பிக்கும் முன்னர் பெரியார் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை?

பதில்: நான் போகவில்லை என்று உங்களுக்கு தெரியுமா?

கேள்வி: திரைத்துறையில் உள்ள பிரச்சனைகளை களைய கமல் முன்வருவாரா என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளாரே?

பதில்: ஜி.எஸ்.டி க்கு எதிராக திரையுலகத்தில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல் என்னடையது தான்.

கேள்வி: சிலைகள் தொடர்ந்து உடைக்கப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: சிலை வைப்பதற்கே வித்தியாசமான கருத்து உடையவன் நான். ஆனால், அதை உடைப்பது மிகக் கேவலமானது. பெரியார் இருந்திருந்தால், எதற்கு சிலை வைக்கிறீர்கள்? என்று கேட்டிருப்பார்.

கேள்வி: நேற்று வந்த கமல்ஹாசன் எங்களுக்கு அரசியல் கற்றுத் தர தேவையில்லை என்று வைகோ சொல்லி இருக்கிறாரே?

பதில்: ஐயோ! நான் அவருக்கெல்லாம் கற்றுத் தரவில்லை. அவரே நல்லா அரசியல் பேசுவார். அவரிடம் இருந்து எல்லோரும் கற்றுக் கொள்ளலாம்.

கேள்வி: அரசியலில் வெற்றி பெற சினிமா புகழ் மட்டும் போதுமா?

பதில்: இல்லை. அப்படி நான் நினைக்கவில்லை.

Makkal Needhi Maiam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment