மின்சாரம் தயாரிக்க பயன்படும் ப்ளூம் பாக்ஸைக் கண்டுபிடித்த டாக்டர் கே.ஆர்.ஸ்ரீதரை நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள 'ப்ளூம் எனர்ஜி' நிறுவனத்தின் சி.இ.ஓவாக ஸ்ரீதர் உள்ளார். இவர், நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்ளும் புதிய தொழில்நுட்பமான ப்ளூம் பாக்ஸை கண்டுபிடித்தவர். இதுகுறித்து ஆலோசனை நடத்த அமெரிக்க சென்ற கமல்ஹாசன், இந்த ப்ளூ பாக்ஸ் தொழில்நுட்பத்தை தமிழகத்தில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்துள்ளார். இந்தத் திட்டத்தினை தமிழகத்தின் கிராம பகுதிகளுக்கு கொண்டுச் செல்வது குறித்து முயற்சிக்குமாறு கமல் அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மேலும், தமிழகம் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதன்மை நுகர்வராக மாறும் எதிர்காலத்தை தம்மால் கணிக்க முடிகிறது என சந்திப்பிற்கு பிறகு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.