‘வடசென்னைக்கு ஆபத்து’ என ட்விட்டரில் நேற்று அபாயச்சங்கு ஊதிய கமல்ஹாச, கோசஸ்தலையாறு பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார். காமராஜர் துறைமுகத்துக்காக ஆக்கிரமிக்கப்படுவதாகவும், வல்லூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்களின் கழிவுகள் அதில் கொட்டப்படுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை அந்தப் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்டு, என்னென்ன பிரச்னை என்பதைக் கேட்டறிந்தார். அங்கு வாழும் மக்களிடமும் அவர்களின் குறைகளைக் கேட்டார். இதன்மூலம் தான் ட்விட்டரில் மட்டும் புலி அல்ல என்பதை நிரூபித்துள்ளார் கமல்ஹாசன்.