Advertisment

”ஆன்மீக இடமான ராமேஸ்வரத்திற்கு சென்று இறைவனை வழிபாடு செய்யாத கமல் ஒரு இந்து துரோகி”: ஹெச் ராஜா!

ராமேஸ்வரத்தில் மணிக்கணக்கில் காத்திருந்த மீனவர்களின் பிரச்னைகளை பொறுமையோடு கேட்டு விவாதிக்க மனமில்லாமல் சென்றவர் தான் கமல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
”ஆன்மீக இடமான ராமேஸ்வரத்திற்கு சென்று இறைவனை வழிபாடு செய்யாத கமல் ஒரு இந்து துரோகி”: ஹெச் ராஜா!

மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை துவங்கியுள்ள கமல்ஹாசன், ஒரு இந்து துரோகி என்று  பாஜக தேசிய செயலாளர் ஹெ. ராஜா தெரிவித்துள்ளார்.

Advertisment

நடிகர் கமல்ஹாசன் கடந்த 21 ஆம் தேதி தனது அரசியல் பயணத்தை துவக்கினார். முதலில் ராமேஸ்வரம் சென்ற அவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்தார். ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்ட கமல், அப்துல் கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார். பின்னர் பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு தனது பயணத்தை தொடர்ந்தார்.

ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடையே உரையாற்றினார். அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு கமலை உற்சாகமாக வரவேற்றனர்.

இரவு 7.15 மணியளவில் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொது கூட்டத்தில் பங்கேற்ற அவர், தனது கட்சி கொடியை ஏற்றினார். பின்பு, ’மக்கள் நீதி மய்யம்’ என்ற தந்து கட்சி பெயரையும் லோகோவையும் அறிவித்து சுமார் 40 நிமிடங்கள் உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இந்நிலையில், கமலின் அரசியல் பிரவேசம் குறித்து பல அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றன. இந்த வகையில், கமலின் அரசியல் அரிதாரம்  குறித்து ஆரம்பத்திலிருந்தே தனது ட்விட்டர் பக்கத்தின்  மூலம்  கருத்துக்களை கூறிவரும் பாஜக தேசிய செயலாளர் ஹெ. ராஜாவிடமும் கமலின் அரசியல் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “ .ராமேஸ்வரத்தில் மணிக்கணக்கில் காத்திருந்த மீனவர்களின் பிரச்னைகளை பொறுமையோடு கேட்டு விவாதிக்க மனமில்லாமல் சென்றவர் தான் கமல். அப்துல்கலாம் வீட்டுக்குச் சென்றவருக்கு, அங்கு இருக்கும் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்லக்கூட நேரமில்லை. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை வரவேற்க வேண்டும் என்பதற்காகவே பரமக்குடி, மானாமதுரை மக்களை ஏமாற்றிவிட்டுச் சென்று விட்டார்.  ஆன்மீக இடமான ராமேஸ்வரத்திற்கு சென்று இறைவனை  கூட வழிபாடு  செய்யாத கமல் ஒரு இந்து துரோகி. இருந்தாலும் புதியதாக கட்சித் துவங்கியுள்ள அவருக்கு என் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment