Advertisment

டிடிவி தினகரன் மீதான தேச துரோக வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

டிடிவி தினகரன், புகழேந்தி ஆகியொர் மீது பதிவு செய்யப்பட்ட தேச துரேக வழக்கை ரத்து செய்ய கோரி தெடர்ந்த வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டிடிவி தினகரன் மீதான தேச துரோக வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

TN Live updates: dinakaran about by election

நீட் விவகாரத்தில் டிடிவி தினகரன், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி ஆகியொர் மீது பதிவு செய்யப்பட்ட தேச துரேக வழக்கை ரத்து செய்ய கோரி தெடர்ந்த வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

Advertisment

மத்திய மாநில அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதாக கூறி டி.டி.வி.தினகரன், கர்நாடக மாநில அ.தி.மு.க ( அம்மா) அணிச் செயலாளர் புகழேந்தி, வெற்றிவேல் உள்ளிட்டோர் மீது சேலம் அன்னதானபட்டி காவல்துறையினர் தேசதுரோக வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன் மீது பழி வாங்கும் நோக்கத்துடன் காவல்துறையினர் பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் துண்டு பிரசுரத்தில் தன்னுடைய படம் இடம்பெற்றதாலேயே தன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக புகழேந்தி குற்றச்சாட்டி மனுவில் தெரிவித்திருந்தார். எனவே உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்ட வழக்கின் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும், வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய போலீஸார்க்கு உத்தரவிட்டார். அதன்படி சேலம் அண்ணதானப்பட்டி ஆய்வாளர் குமார் நேற்று பதில் மனு தாக்கல் செய்தார் அதில், ’’(அதிமுக புரட்சித் தலைவி அம்மா) கிளை செயலாளர் சரவணன் என்பவர் அளித்த புகாரில், டிடிவி தினகரன் அணியை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவினை மீறி மக்களை போராட தூண்டும் உள்நோக்கத்துடன் இந்த துண்டு பிரசுரத்தில் வாக்கியங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. மாநில அரசை எட்டப்பன் அரசு என கூறுவது சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும். இது தொடர்பாக விசாரணை நடத்திய போது, டிடிவி தினகரனின் உத்தரவின் பேரில் தான் இது போன்ற நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டது என கலைவாணி என்பவர் ஒப்புக்கொண்டுள்ளார். அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் 17 பேர் மீது தேச துரோக வழக்கு உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நீட் எதிர்ப்பு போராட்டங்கள் தமிழகத்தில் நடந்த போது, வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் போராட்டங்களை முறைபடுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் உச்சநீதிமன்றம், அமைதியான முறையில் போராடுவது அடிப்படை உரிமை என்றாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையிலும் போராட்டங்கள் நக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புகாரில், சம்மந்தப்பட்டவர்கள் சட்டம் ஒழுங்கை மீறக் கூடாது என போராட்டகாரர்களுக்கு அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படகூடாது என்பதற்காக புகழேந்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் எதிராக தரகுறைவாகவும் அவதூறகவும் பேசும் வண்ணம் துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கபட்டுள்ளது. விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அதன் முடிவு எப்படி வரும் என காத்திருக்காமல் அவசரகதியிலும், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே புகழேந்தி நீதிமன்றத்தை நாடியுள்ளார். எனவே புகழேந்தி மீதான வழக்கை ரத்து செய்ய கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டார். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் நீட் தேர்வுக்கு எதிராக பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டம் நடத்திய இவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டது. மேலும் நீட் தேர்வு போராட்டம் என்ற பெயரில் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் போராட்டம் நடந்ததாக கூறினார். அதே போல அவர்கள் வினியோகித்த துண்டு பிரசுரத்தில் அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் வகையில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன என கூறினார்.

அப்போது குறிக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார். மேலும் துண்டு பிரசூரங்களில் அண்ணா, பெரியார் போன்றவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த துண்டு பிரசுரங்களில் வன்முறையை தூண்டும் விதமாக வார்த்தைகள் இல்லையே. அப்படி இருக்கும்போது எப்படி அவதூறு வழக்கு பதிய முடியும். அதேபோல் 124 (A) பிரிவின் கீழ் தேசதுரோக எப்படி வழக்கு பதியலாம்.

ஜனநாயகத்தில் கருத்து கூறவோ, விமர்சிக்கவோ உரிமை உள்ளது. ஆனால் இந்த அரசு விமர்சனம் செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்கிறது. மேலும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒருவர் அதிகாரத்தை பயன்படுத்தி அவதூறு வழக்கு பதியக்கூடாது என உத்தரவிட்டுள்ளதே, அது இங்கு மீறப்பட்டுள்ளது.

மேலும் அரசுக்கு எதிராக கருத்து கூறவோ, விமர்சிக்கவோ, பேச்சுரிமைக்கோ உரிமையில்லை என்றால், அரசியலமைப்பையும், நீதிமன்றத்தையும் மூட வேண்டியதுதான். இது போன்ற அடக்குமுறைகள் சுதந்திரத்துக்கு முன்பான காலனி ஆதிக்கத்தை கண் முன் நிறுத்துவதாக வாதிட்டார். மேலும் இது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் அல்ல. அண்ணா, பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டமே.

அதில் தமிழகத்துக்கு உரிய தலைமை இல்லாததால் காவிரி, முல்லை பெரியாறு, நீட் உள்ளிட்ட விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளோம் என தமிழக பிரச்சனைகளை முன்னிறுத்தி தான் பிரசுரம் வழங்கினோம். இந்த துண்டு பிரசுரம் வழங்கியதால் எந்த போராட்டமோ, வன்முறையோ நடக்கவில்லை. மேலும் ஆயுதங்கள் எடுத்து, அரசுக்கு எதிராக போராடுங்கள் என கூறவில்லை

எனவே எப்படி இந்த விவகாரத்தை தேசதுரோக வழக்காக எப்படி கருத முடியும்? நாங்கள் என்ன தேசதுரோகிகளா? அரசை விமர்சித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினால் தேசதுரோக வழக்கு பதியப்படுமானால், வழக்கறிஞரின் வாதத்தை வைத்து தேசதுரோக வழக்கு பதியலாமா? கருத்துகள், நடைமுறைகள் குறித்து விவாதங்கள் இல்லையென்றால் எந்த மாற்றமும் வராது என வாதிட்டார்.

இதனை அடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Chennai High Court Tamilnadu Madras High Court Vk Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment