Advertisment

ஜெயலலிதா மரபணு மாதிரி இல்லை : உயர் நீதிமன்றத்தில் அப்பல்லோ பதில்

ஜெயலலிதா மரபணு மாதிரி தங்களிடம் இல்லை என பெங்களூரு அம்ருதா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பல்லோ நிர்வாகம் பதில் தெரிவித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Freedom of Press, Jeyalalitha Case On India Today Dismissed, ஜெயலலிதா அவதூறு வழக்கு, இந்தியா டுடே, பத்திரிகை சுதந்திரம்

Freedom of Press, Jeyalalitha Case On India Today Dismissed, ஜெயலலிதா அவதூறு வழக்கு, இந்தியா டுடே, பத்திரிகை சுதந்திரம்

ஜெயலலிதா மரபணு மாதிரி தங்களிடம் இல்லை என பெங்களூரு அம்ருதா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பல்லோ நிர்வாகம் பதில் தெரிவித்தது.

Advertisment

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அவரது வாரிசு தொடர்பான சர்ச்சை எழுந்தது. பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர், தனது அம்மா ஜெயலலிதா என்று உரிமை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'நான் ஜெயலலிதாவின் மகள் என்பது கடந்த ஆண்டு (2017) மார்ச் மாதம் தான் தெரியவந்தது. என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நான் மறைத்து வளர்க்கப்பட்டேன். ஜெயலலிதாவை என் பெரியம்மா என்று தான் நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் தான் என் தாயார் என்று உறவினர்கள் கூறினர்.

கடந்த 1980 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14 ஆம்தேதி ஜெயலலிதாவின் மகளாக பெங்களூருவில் பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். எனக்கு அம்ருதா என்று பெயர் சூட்டினார்கள். என்னை உறவினர்கள் செல்லமாக மஞ்சுளா என்றும் அழைப்பார்கள். 3 மாத குழந்தையாக இருந்த போதே ஜெயலலிதாவின் தாயார் சந்தியா என்னை தற்போது வளர்ந்து வரும் தாயார் சைலஜாவிடம் என்னை தத்து கொடுத்து விட்டார்.

எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி, யாருக்கும் தெரியாமல் மறைத்து வளர்த்தனர். சைலஜாதான் என் தாயார் என்று நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். இதற்கு முன்பு எனது தாயார் சைலஜா பல அ.தி.மு.க. பிரமுகர்களை சந்தித்து, தான் ஜெயலலிதாவின் தங்கை என்று அவர்களிடம் கூறி இருக்கிறார். ஆனால் யாரும் நம்பவில்லை.

என்னை வளர்த்த தந்தை சாரதியும், கடந்த 2016 ஆம் ஆண்டு இறந்து விட்டார். நான் ஜெயலலிதா மகள் என்பதை அமெரிக்காவில் உள்ள என் உறவினர் ஜெயலட்சுமி, பெங்களூருவில் உள்ள இன்னொரு உறவினர் லலிதா ஆகியோர் உறுதிப்படுத்தி விட்டனர். ஜெயலலிதா தான் என் தாய் என்பதை நிரூபிக்கவே டி.என்.ஏ. பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்.

நான் ஜெயலலிதாவின் மகள் என்பது தற்போது துணை முதல்- அமைச்சராக உள்ள ஒ. பன்னீர் செல்வத்துக்கும் தெரியும். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, போயஸ் கார்டன் வீட்டில் பல முறை அவரை சந்தித்து இருக்கிறேன். அப்போது அவர் என்னை ஆரத்தழுவி தாய் ஸ்தானத்தில் இருந்து முத்தம் கொடுப்பார். இங்கிருந்து நீ சென்று விடு, நீ உயிரோடு இருந்தால் போதும் என்று அவர் பல முறை என்னிடம் கூறினார். இப்போது தான் அவர் என் தாய் என்பதை அவர் இல்லாதபோது உணருகிறேன். ஜெயலலிதா பெயருக்கு அவப்பெயர் ஏற்படக் கூடாது என்பதற்காக அவர் உயிரோடு இருந்த வரை அவர் தான் என் தாய் என்று நான் கூறவில்லை. இப்போது தான் அவர் என் தாய் என்பதை பகிரங்கமாக கூறுகிறேன்.

2016 ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மறைந்த என் தாயார் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலை தோண்டி எடுத்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அவரது மகள் என்ற முறையில், வைணவ முறைப்படியும், எங்களின் குடும்ப வழக்கபடியிம் இறுதி சடங்கு செய்ய எனக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி, கடந்த ஆண்டு (2017) டிசம்பர் 10 ஆம் தேதி தமிழக தலைமை செயலாளர், சென்னை போலீஸ் கமிசனர் ஆகியோரிடம் மனு கொடுத்தேன். அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, நான் கொடுத்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் ' என்று மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் நிலுவையில் உள்ளது. அம்ருதா மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு, தீபக், தீபா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தீபா மற்றும் தீபக் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த பதில் மனுவில், ‘அத்தை ஜெயலலிதாவின் சொத்துகளை குறிவைத்தே அம்ருதா அவரது மகள் எனக்கூறி பொய்யான வழக்கை தொடர்ந்துள்ளார். எனது பாட்டி சந்தியாவுக்கு ஜெயலலிதா மற்றும் ஜெயக்குமார் மட்டுமே வாரிசுகள். இது ஒரு பொய் வழக்கு என்றும் அம்ருதா மோசடி பேர்வழி என்றும் எனவே அம்ருதாவின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என கூறியிருந்தனர்.

இதே போல் தமிழக அரசு சார்பில் கடந்த 18 ஆம் தேதி தாக்கல் செய்த பதில் மனுவில்,அதில் ஜெயலலிதாவின் மகள் அம்ருதா என்பதற்கு இது வரை எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்றும், ஆர்.கே.நகர் இடைதேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், டி.என்.ஏ.சோதனை தேவையில்லை, ஜெயலலிதா தான் தன் தாய் என்று உரிமை கோர, சிவில் நீதிமன்றத்தை தான் அம்ருதா அனுகி இருக்க வேண்டும் மேலும் ஜெயலலிதா உறவினர் என கூறிய பெண்ணுக்கு எதிராக கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் வழக்கு தெடரப்பட்டுள்ளது. எனவே இதனடிப்படையில் அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக இளைஞர் அணியை சேர்ந்த விஷ்ணுபிரவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மறைந்த தமிழக முதல்வர் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் இந்த வழக்கு தெடரப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா மரணம் அடைந்த 1 வருடத்திற்கு பிறகு இந்த வழக்கு தெடரப்பட்டுள்ளது இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. மேலும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் உயர்நீதிமன்றத்தை நாட உத்தரவிடவில்லை. மனுதரார் முதலில் வாரிசு என்பதற்காக எந்த வித சான்றிதழ் தாக்கல் செய்யவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கை தாக்கல் செய்தது ஏன்? எனவே இதனை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றார்.

அம்ருதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரகாஷ், ‘ஜெயலலிதாவின் மரபணு மாதிரிகள் (உயிரி மாதிரிகள்) தொடர்பாக விபரங்களை தாக்கல் செய்ய ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டும் அது தொடர்பான விபரங்களை அப்பலோ மருத்துவ மனை தாக்கல் செய்யவில்லை’ என்றார்.

அப்போது நீதிபதி இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் உயிரி ரத்த மாதிரிகள் உள்ளதா என்பது தொடர்பான விபரங்களை தாக்கல் செய்யவில்லை என அப்பல்லோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அப்பலோ நிறுவன தரப்பு வழக்கறிஞர், பதில் அளிக்க மேலும் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்றார்.

இதனையடுத்து நீதிபதி வைத்தியநாதன், ‘ஜெயலலிதா ரத்த மாதிரிகள் தொடர்பான விபரங்கள் உள்ளனவா என்பது குறித்து நாளை (அதாவது, இன்று) பதில் அளிக்க அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி இன்று (ஏப்ரல் 26) அப்பல்லோ நிர்வாகம் தனது பதிலை தாக்கல் செய்தது. அதில், ‘பொதுவாக மரபணு மற்றும் ரத்த மாதிரிகளை ஓராண்டு மட்டுமே வைத்திருக்க முடியும். தவிர, ஜெயலலிதாவின் மரபணு மாதிரியை நாங்கள் எடுத்து வைக்கவில்லை. எனவே எங்களிடம் அவை இல்லை’ என பதில் தெரிவித்தது.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணையின்போது இது தொடர்பான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Chennai High Court Apollo Hospital
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment