Advertisment

ஜெயலலிதா மரபணு மாதிரிகள் உள்ளதா? அப்பலோ நிர்வாகத்திடம் ஐகோர்ட் கேள்வி

ஜெயலலிதாவின் மரபணு ( உயிரி) இருக்கிறதா என்பது தொடர்பாக அப்பல்லோ மருத்துமனை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜெயலலிதா 71வது பிறந்தநாள்

ஜெயலலிதா 71வது பிறந்தநாள்

ஜெயலலிதாவின் மரபணு (உயிரி) மாதிரிகள் (biological) உள்ளதா? என்பது குறித்து பதில் அளிக்க அப்பலோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. 

Advertisment

பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர், தனது அம்மா ஜெயலலிதா என்று உரிமை கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது, அம்ருதாவை கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், ஜெயலலிதா வாழ்ந்தது, அவர் உடல் புதைக்கப்பட்டது எல்லாம் தமிழ்நாடு என்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தை நாட அனுமதி கோரப்பட்டது. அதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதித்தது. 

இதையடுத்து, அம்ருதா உள்ளிட்ட அவரின் குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 'நான் ஜெயலலிதாவின் மகள் என்பது கடந்த ஆண்டு (2017) மார்ச் மாதம் தான் தெரியவந்தது. என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நான் மறைத்து வளர்க்கப்பட்டேன். ஜெயலலிதாவை என் பெரியம்மா என்று தான் நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் தான் என் தாயார் என்று உறவினர்கள் கூறினர்.

கடந்த 1980 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதி ஜெயலலிதாவின் மகளாக பெங்களூருவில் பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். எனக்கு அம்ருதா என்று பெயர் சூட்டினார்கள். என்னை உறவினர்கள் செல்லமாக மஞ்சுளா என்றும் அழைப்பார்கள். 3 மாத குழந்தையாக இருந்த போதே ஜெயலலிதாவின் தாயார் சந்தியா என்னை தற்போது வளர்ந்து வரும் தாயார் சைலஜாவிடம் என்னை தத்து கொடுத்து விட்டார்.

எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி, யாருக்கும் தெரியாமல் மறைத்து வளர்த்தனர். சைலஜாதான் என் தாயார் என்று நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். இதற்கு முன்பு எனது தாயார் சைலஜா பல அ.தி.மு.க. பிரமுகர்களை சந்தித்து, தான் ஜெயலலிதாவின் தங்கை என்று அவர்களிடம் கூறி இருக்கிறார். ஆனால் யாரும் நம்பவில்லை. 

என்னை வளர்த்த தந்தை சாரதியும், கடந்த 2016 ஆம்  ஆண்டு  இறந்து விட்டார். நான் ஜெயலலிதா மகள் என்பதை அமெரிக்காவில் உள்ள என் உறவினர் ஜெயலட்சுமி, பெங்களூருவில் உள்ள இன்னொரு உறவினர் லலிதா ஆகியோர் உறுதிப்படுத்தி விட்டனர். ஜெயலலிதா தான் என் தாய் என்பதை நிரூபிக்கவே டி.என்.ஏ. பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். நான் ஜெயலலிதாவின் மகள் என்பது தற்போது துணை முதல்- அமைச்சராக உள்ள ஒ. பன்னீர் செல்வத்துக்கும் தெரியும். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, போயஸ் கார்டன் வீட்டில் பல முறை அவரை சந்தித்து இருக்கிறேன். அப்போது அவர் என்னை ஆரத்தழுவி தாய் ஸ்தானத்தில் இருந்து முத்தம் கொடுப்பார். ’இங்கிருந்து நீ சென்று விடு, நீ உயிரோடு இருந்தால் போதும்’ என்று அவர்  பல முறை என்னிடம் கூறினார். இப்போது தான்  அவர் என் தாய் என்பதை அவர் இல்லாத போது உணருகிறேன். ஜெயலலிதா பெயருக்கு  அவப்பெயர் ஏற்படக் கூடாது என்பதற்காக அவர் உயிரோடு இருந்த வரை அவர் தான் என் தாய் என்று நான் கூறவில்லை. இப்போது தான்  அவர் என் தாய் என்பதை பகிரங்கமாக கூறுகிறேன்.

2016 ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மறைந்த என் தாயார் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலை தோண்டி எடுத்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அவரது மகள் என்ற முறையில், வைணவ முறைப்படியும், எங்களின் குடும்ப வழக்கபடியிம் இறுதி சடங்கு செய்ய எனக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி, கடந்த ஆண்டு (2017) டிசம்பர் 10 ஆம் தேதி தமிழக தலைமை செயலாளர், சென்னை போலீஸ் கமிசனர் ஆகியோரிடம் மனு கொடுத்தேன். அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, நான் கொடுத்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் ' என்று மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வைதியநாதன் முன்னிலையில் நிலுவையில் உள்ளது. அம்ருதா மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு, தீபக், தீபா ஆகியோர்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் தீபா மற்றும் தீபக் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘ அத்தை ஜெயலலிதாவின் சொத்துகளை குறிவைத்தே அம்ருதா அவரது மகள் எனக்கூறி பொய்யான வழக்கை தொடர்ந்துள்ளார்.  எனது பாட்டி சந்தியாவுக்கு ஜெயலலிதா மற்றும் ஜெயக்குமார் மட்டுமே வாரிசுகள். இது ஒரு பொய் வழக்கு என்றும் அம்ருதா மோசடி பேர்வழி என்றும் எனவே அம்ருதாவின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என கூறியுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அம்ருதா தொடர்பாக விசாரணை செய்யபட்டு வருவதாகவும் அவர்  தொடர்பாக 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை உள்ள ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்து விடுவோம் என்றார். 

அப்போது நீதிபதி இவ்வாறு கால அவகாசம் கேட்டுக் கொண்ட சொல்வதால் இந்த வழக்கல் இணைப்பு மனுக்கள் அதிகமாகி கொண்டே இருக்கின்றன என்றார். 

இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்த இல்லையா என்று இன்னும் முடிவு செய்யாத நிலையில் இணைப்பு மனுக்களை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். 

தீபா மற்றும் தீபக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றனர். 

அம்ருதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரகாஷ், ஜெயலலிதாவின் மரபணு மாதிரிகள் (உயிரி மாதிரிகள்) இருக்கிறதா? இல்லையா? என்பது இதுவரை தெரியவில்லை. எனவே இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் புகழேந்தியை இந்த வழக்கில் இணைக்க கூடாது என்றும் தெரிவித்தார். 

அப்போது நீதிபதி,  இந்த வழக்கில் ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் இந்த வழக்கில் எதிர் மனுதாராக இருக்கும், ரத்த சொத்தங்கள் இல்லாதவர்களை எப்படி இணைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். மேலும் நாட்டின் முதலமைச்சராக இருந்தவரின் புகழுக்கு கலங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்றும் கருத்து தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரபணு ( உயிரி) இருக்கிறதா என்பது தொடர்பாக அப்பல்லோ மருத்துமனை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment