இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டுகிறது. சென்னை விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய பின்னர், மதுரைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து ரோடு வழியாக சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட உள்ளது.
சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் பெரியபாண்டியன். சென்னை கொளத்தூரில் நடந்த நகை கடை கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்ற தனிப்படையில் இடம் பெற்றிருந்தார். 13ம் தேதி அதிகாலை, கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது, அவர்களுடன் ஏற்பட்ட சண்டையில் பெரியபாண்டியன் நகை கொள்ளையர்களால் சுட்டுக் கொள்ளப்பட்டார்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவத்தால் தமிழக போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதி கொடுக்கப்பதாக அறிவித்தார்.
சுட்டுக் கொல்லப்பட்ட பெரியபாண்டியின் உடலை சென்னை கொண்டு வர, இணை கமிஷனர் சந்தோஷ் குமார் தலைமையில் போலீசார் ராஜஸ்தான் விரைந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு ஜெய்பூரில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் பகல் 12 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தது.
பெரிய பாண்டியின் உடலுக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள். அதன் பின்னர் விமானம் மூலம் அவரது உடலை மதுரைக்கு கொண்டு செல்கிறார்கள். மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக சொந்த ஊரான சங்கரன்கோயில் அருகில் உள்ள சாலைப்புதூருக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு உறவினர்களும், போலீசாரும் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்துக்கிறார்கள். அதன் பின்னர் போலீஸ் மரியாதையுடன் அவரது இறுதி சடங்கு நடைபெறும்.
இந்நிலையில் தீரன் படத்தில் நடித்த நடிகர் கார்த்தி, பெரியபாண்டியனுக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:
With a heavy heart our #salute to you and your family sir. #Police #Periyapandian pic.twitter.com/AlerLpvf0X
— Actor Karthi (@Karthi_Offl) 14 December 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.