Advertisment

வெளிநாட்டு மணல் விற்பனை : தமிழக அரசு பதில் மனு தாக்கல்

இறக்குமதி மணலை தனியார் விற்பனை செய்ய அனுமதித்தால் சட்டவிரோத குவாரிகள் பெருகும் என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Imported Sand, Tamilnadu Government Affidavit

Imported Sand, Tamilnadu Government Affidavit

இறக்குமதி மணலை தனியார் விற்பனை செய்ய அனுமதித்தால் சட்டவிரோத குவாரிகள் பெருகும் என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Advertisment

மணல் விற்பனை தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரிய ஒரு அம்சமாக இருந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை பொதுப்பணித்துறை தான் விற்பனை செய்யும் எனவும், சொந்த பயன்பாட்டுக்கு கூட அனுமதிக்க முடியாது என கட்டுப்பாடுகள் விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி தமிழக பொதுப்பணித்துறை அரசாணை பிறப்பித்தது.

தமிழகத்தில் அனைத்து மணல் விற்பனையையும் பொதுப்பணி துறை மட்டுமே நடத்த வேண்டும் எனவும், இறக்குமதி செய்யப்பட்டால் அதனை தமிழக அரசிடம் அளிக்க வேண்டும். அரசு தான் அதனை விற்பனை செய்யுவும் விலை நிர்ணயம் செய்யும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து, தினமலர் கோவை பதிப்பின் வெளியீட்டாளர் ஆதிமூலம் தாக்கல் செய்த பொது நல மனுவில், மணல் விற்பனையாளர்கள், பயன்பாட்டாளர் உரிமையை பறிக்கும் வகையில் தமிழக அரசு எடுத்துள்ள முடிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதாக உள்ளது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தமிழக அரசின் அரசாணை உள்ளது.

மேலும் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மணல் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஓரு தலைபட்சமான நடவடிக்கை. எனவே அரசாணைக்கு தடைவிதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து இறுக்குமதி செய்யப்படும் மணலை பொது பணித்துறை மட்டுமே விற்கும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்து அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதனையடுத்து தமிழக பொதுப்பணி துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், கனிம வள ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் அரசுக்கு , இறக்குமதி செய்யப்பட்ட மணலை தனியார் விற்பனை செய்ய தடை விதிக்கும் அதிகாரம் உள்ளது, மணலை இறக்குமதி செய்ய தடை இல்லையென்றாலும், இறக்குமதி செய்த மணலை அரசு நிர்ணயிக்கும் விலையில் பொதுப்பணித்துறையிடம் மட்டுமே விற்கவேண்டும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் மணல் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வாங்க கூடியதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை அரசு எடுத்துள்ளது. இறக்குமதி மணல் இங்குள்ள குவாரி மணலுக்கு மாற்றாக கருதமுடியாது. மலிவுவிலையிலும் விற்க முடியாது. தற்போது தமிழகத்தில் மணல் பற்றாக்குறை ஏற்பட காரணம் திருச்சி, கரூர் பகுதிகளில் மணல் குவாரிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்தது தான் காரணம்.

இறக்குமதி மணலை அனுமதித்தால் சட்டவிரோத மணல் குவாரிகள் உருவாக வழி வகுக்கும், இறக்குமதி செய்யப்பட்ட மணல் என்று கூறி உள்ளூர் சட்டவிரோத குவாரி மணலை விற்பார்கள். எனவே தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணலை தனியார் விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் இரு தரப்பு விசாரணை மார்ச் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

 

Chennai High Court Sand Quarries
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment