“இளையராஜா ஏற்கெனவே ஐயர் தான்” என ஐயருக்கான புது விளக்கத்தைக் கொடுத்துள்ளார் எச்.ராஜா.
தேனியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாரதிராஜா, “இளையராஜா ஐயர் ஆக மாற நினைக்கிறார். மூலத்தை மறந்துவிட்டு புதிதாக வேடமிடுவது தவறு” எனத் தெரிவித்தார்.
பாரதிராஜாவின் இந்தப் பேச்சுக்குப் பதில் அளிக்கும் வகையில், பாஜகவின் தேசிய செயலாளரான எச்.ராஜா இன்று ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ஐயர் என்றால் ஆசிரியர், மேன்மை கொண்டோர் என்றுதான் பொருள். ஆகவே இசைஞானி இளையராஜா அவர்கள் ஏற்கெனவே ஐயர் தான். அவர் புதிதாக முயற்சிப்பதாகக் கூறுவது புரிதல் இன்மையே” என்று தெரிவித்துள்ளார்.