Advertisment

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் இந்திய ஆட்சிப் பணித்துறை மற்றும் இந்திய காவல் பணித்துறை அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

தமிழகத்தில் இந்திய ஆட்சிப் பணித்துறை மற்றும் இந்திய காவல் பணித்துறை அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

தமிழக அரசின் சிறப்பு செயலாளராக இருந்த ஜெயா, இந்து அறநிலையத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர், வேலை வாய்ப்பு துறை செயலாளராக இருந்த, அமுதா உணவு பாதுகாப்பு துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். குன்னூர் இன்ட்கோசர்வ் கூட்டமைப்பின் மேலாண் இயக்குனராக வீனித் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், இந்திய காவல் பணித்துறை அதிகாரிகள் கல்பனா நாயக் ஐபிஎஸ்., தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐ.ஜி.,-யாகவும், மகேந்திர குமார் ரத்தோட் ஐபிஎஸ்.,தொழில்நுட்ப சேவைகள் டிஐஜி-யாகவும், எம்.துரை ஐபிஎஸ்., கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.-யாகவும், ஜி.தர்மராஜன் ஐபிஎஸ்., கோவை மாநகர துணை ஆணையராகவும், ஜெ.மகேஷ் ஐபிஎஸ்., மதுரை மாநகர காவல்துறை துணை ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அருண் பாலகோபாலன் ஐபிஎஸ்., எஸ்.பி.,-யாக பணி உயர்வு பெற்று மதுரை மாநகர துணை ஆணையராகவும் (டிராஃபிக்), என்.ஸ்டீபன் ஜேசுபதம் எஸ்.பி.,-யாக பணி உயர்வு பெற்று சென்னை எஸ்ஐடி சிபி சிஐடி காவல்துறை கண்காணிப்பாளராகவும், தங்கதுரை எஸ்.பி.,-யாக பணி உயர்வு பெற்று சேலம் மாநகர காவல்துறை கண்காணிப்பாளராகவும் (கிரைம் & டிராஃபிக்), ராமகிருஷ்ணன் காவல்துறை கண்காணிப்பாளர் / தூத்துக்குடி மாவட்ட காவலர் தேர்வு பள்ளியின் முதல்வராகவும், மயில்வாகனன் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையராகவும் (கிரைம் & டிராஃபிக்) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Ips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment