governor-rn-ravi | தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (நவ.19) மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர்.
டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என். ரவி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துவார் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, தமிழ்நாடு கவர்னர் மீது திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நாளை (நவ.20,2023) விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையில் இன்று ஆளுநர் டெல்லி புறப்ப்டடு சென்றதால் அவர் இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்ற தகவலை வலுப்பெற செய்துள்ளது.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார். தொடர்ந்து, இந்த மசோதாக்களை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து மீண்டும் அனுப்புவோம் என சபாநாயகர் கூறினார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“