Advertisment

திருச்சி: நகைக்கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

திருச்சி சின்னக் கடை வீதி ,பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
sagva

திருச்சி சின்னக் கடை வீதி ,பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

5 கார்களில் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக நள்ளிரவு முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பத்திற்கு மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களை வைத்து இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

இவர்கள் சிறு கடைகளை வைத்துக்கொண்டு வேறு எதுவும் தொழிலில் முதலீடு செய்து உள்ளார்களா? இவர்களுடைய முக்கிய பிரதான தொழில் வேறொன்று உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ங்களில் மணல் குவாரிகளில் அமலாக்க துறை சோதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று சென்னையில் அந்த முதன்மை நீர் வளத்துறை பொறியாளரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

இதுமட்டுமின்றி சென்னையில் உள்ள பிரபல நகை கடைகளில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சென்னை சென்ட்ரல், பாரிமுனை உள்பட 7 இடங்களில் சோதனை நடத்துகின்றனர். சென்னை பாரிமுனையில் உள்ள 2 நகைக்கடையில் 10 அதிகாரிகள் இரண்டு குழுவாக பிரிந்து சோதனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து இன்று திருச்சியில் சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சியில் உள்ள சிறிய சிறிய நகைக் கடைகளின் மூலம் வேறு தொழிலில் முதலீடு செய்து வருகிறார்களா? அல்லது மணல் குவாரியுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? அதன் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் திருச்சி சின்ன கடைத் தெருவு மற்றும் பெரிய கடைத்தெரு வீதிகளில் அதிக அளவு நகை கடைகள் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையால் அப்பகுதியில் உள்ள மற்ற நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சோதனையின் முடிவில் பரபரப்பு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், கேரளாவில் தங்கக்கடத்தல் விவகாரத்தில் கைதாகி உள்ள ஸ்வப்னாவுடன் தொடர்பு உள்ளதா என ஆவணங்கள் ஆய்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பல மணி நேரமாக 15 பேர் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் குழு நகைக் கடைகளில் சோதனை நடத்தி வருவது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment